🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் தவிக்கும் நரசிங்கநல்லூர் கிராம மக்கள்!4 கி.மீ. தூரம் ஆபத்தான பாதையில் குழந்தைகள் பயணம் – 61 குழந்தைகளுக்கு கல்வி, மதிய உணவு கிடைக்காத …

காவலர் தின நிகழ்ச்சியில் போலீசார் உறுதிமொழி ஏற்புசேலம்: சேலம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சந்தோஷ் …

திருவண்ணாமலை மாவட்டம் 🚨🚨⚡ அடிப்படை வசதிகள் இல்லாத சுங்கச்சாவடி… இருளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்!திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா காரியமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில், பல நாட்களாக முக்கியமான மின்விளக்குகள் …

நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு வீடுகள் கட்டித்தர கோரிக்கை திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தச்சூர் கிராமத்தில் வசிக்கும் 40 நரிக்குறவர் இன மக்களுக்கு தமிழக அரசின் வெற்றி வீடு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்பேத்கர் சிலை அருகில் கவன ஈர்ப்பு ஊர்வலம். ஆர்ப்பாட்டம். தோழர்.மு. அறிவழகன் தலைவர். தலைமையில்.ஆகஸ்ட் 24. சாத்தனூர் நீர்த்தேக்கம் பகுதியில் உயிர் பலி ஏற்படுவதைத் தடுத்து …

முக்கிய செய்தி

  • Home /
  • SPIRITUALITY /
  • Temple /
  • சேலத்தில் 22 ஆம் ஆண்டு மெகா பரிசளிப்பு விழா.

சேலத்தில் 22 ஆம் ஆண்டு மெகா பரிசளிப்பு விழா.

சேலத்தில் 22-வது ஆண்டு மெகா பரிசளிப்பு விழா நாளை நடைபெறுகிறதுசேலம்:தமிழ்நாடு வீரசைவப் பேரவை, தலைமை ஜங்கம் சமூக நலச்சங்கம் மற்றும் நாகரத்தினம் அங்காளம்மாள் கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்தும் 22-வது ஆண்டு மெகா பரிசளிப்பு விழா நாளை (ஜூன் 28) காலை 10 மணிக்கு சேலம் சீல்நாயக்கன்பட்டி பைபாஸ் அருகிலுள்ள சந்திரா மகாலில் நடைபெறுகிறது.இவ்விழாவில் 2026-ம் ஆண்டு அரசு பொதுத் தேர்வுகளில் 80 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண்கள் பெற்ற 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர்.மேலும் மகான் பசவண்ணர் ஜெயந்தி விழா, அகில இந்திய வீரசைவ மகாசபை தலைவருக்கான பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழாக்களும் இணைந்து நடைபெறுகின்றன. மயிலம் பொம்மபுரம் ஆதீனம் பட்டம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் அருளாசி வழங்கியுள்ளனர்.விழாவில் அகில இந்திய வீரசைவ மகாசபை தலைவரும், கர்நாடக மாநில வனத்துறை அமைச்சருமான ஈஸ்வர் பி. கண்ட்ரே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார். அகில இந்திய வீரசைவ மகாசபை பொதுச் செயலாளர் ரேணுகா பிரசன்னா உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர்.தமிழ்நாடு வீரசைவப் பேரவை மாநிலத் தலைவர் நாகரத்தினம், தலைமை ஜங்கம் சமூக நலச்சங்க மாநிலத் தலைவர் ஏ.கே. நாகராஜன், அகில இந்திய வீரசைவப் பேரவை மாநில பொதுச் செயலாளர் பாலாஜி, பொருளாளர் விவேகானந்தன், மாநில பொதுச் செயலாளர் கலியமூர்த்தி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், இளைஞர் அணி, மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.தகுதியுள்ள மாணவ, மாணவியர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் விழாவில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்