விவசாய கணத்தில் தவறி விழுந்த பெண்மணியை காப்பாற்றிய தீயணைப்பு துறையினர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா பெயர் மட்டும் கிணற்றில் விவசாய நிலத்தில் உள்ள வறண்ட கிணற்றில் ஆனந்தி என்ற பெண்மணி தவறி விழுந்துள்ளார். தகவல் அறிந்த செங்கம் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று கிணற்றில் விழுந்த பெண்மணியை துரிதமாக செயல்பட்டு எந்த ஒரு காயங்களும் இன்றி பத்திரமாக காப்பாற்றி உள்ளனர். மற்றும் இது போன்ற வெயில் காலங்களில் கிண்ணற்றோரும் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் மற்றும் அங்கு செல்ல நேர்ந்தால் பாதுகாப்புடன் செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர் மாவட்டச் செய்தியாளர் எம். சங்கர்
தமிழ்நாடு முதல்வராக சி. ஜோசப் விஜய் அவர்கள் பதவி ஏற்றார்.

தமிழ்நாடு முதல்வராக சி. ஜோசப் விஜய் அவர்கள் இன்று காலை 10 அளவில் நேரு விளையாட்டு அரங்கில் பதவி ஏற்றார். பதவியேற்று முதல் மூன்று சிறப்பம்சங்களில் கையெழுத்து போட்டார். அவை 1. இரண்டு மாதத்திற்கு 500 யூனிட் பயன்படுத்தும் வீடுகளுக்கு 2 மாதத்திற்கு 200 யூனிட் இலவச மின்சாரம். 2.போதைப்பொருள் தடுப்பு சிறப்பு டாஸ்க் ஃபோர்ஸ் அமைத்தல். 3.பெண்கள் பாதுகாப்பிற்கான தனி பாதுகாப்பு படை அமைத்தல். அதுமட்டுமின்றி அவர் பேட்டி அளிக்கையில் நானும் தவறு செய்யமாட்டேன் யாரையும் தவறு செய்ய விட மாட்டேன் என்று கூறி பதவிக்கு வந்து விட்டோம் என்ற எண்ணத்தில் ஏதாவது தவறான செயல்களில் ஈடுபடும் எண்ணம் இருந்தால் அந்த எண்ணங்களை இங்கேயே மறந்து விடுங்கள் என்று எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தினார். அதுமட்டுமின்றி தன்னை வெற்றி பெற செய்த மக்கள் மற்றும் சிறுவர்களுக்கு நன்றியை தெரிவித்து தமிழ்நாட்டை பாதுகாப்பான நாடாகவும் மற்றும் என்னை வெற்றி பெறச் செய்த உங்களுக்கு உண்மையாக இருப்பேன் என்று உறுதி அளித்தார். மாவட்டச் செய்தியாளர் பு. பிரபு
தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் இன்று பதவி ஏறகிறார்
தமிழக புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்பு: தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.பதவியேற்பு விழா நேரலை: சென்னையின் 20 முக்கிய இடங்களில் இந்த விழா நேரலையில் ஒளிபரப்பப்படுகிறது. கூட்ட நெரிசலைத் தவிர்க்க நேரு ஸ்டேடியத்திற்கு மக்கள் திரளாக வருவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் விண்ணனுர் அருகே பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்கள் உயிர்த்த தப்பினர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா விண்ணனுர் அருகே திருவண்ணாமலை இருந்து சிவசக்தி தனியார் பேருந்து செங்கம் நோக்கி சென்று கொண்டு இருந்தன. எதிரே வந்த பாண்டிச்சேரி பதிவெண் கொண்ட வாகனம் விண்ணனுர் அருகே அரசு பேருந்தை முந்தும் போது எதிரே வந்த சிவசக்தி பேருந்தில் மோதின. பேருந்து ஓட்டுநர் மிக கவனமாக பேருந்தை ஓட்டியதால் பெரிய அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கப்பட்டன. காரில் இருந்த மூன்று பேர் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர்த்தப்பினர். இதனால் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.தகவல் அறிந்து வந்த பாய்ச்சல் காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை சரி செய்து காரில் வந்தவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாவட்டச் செய்தியாளர் பு. பிரபு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்றத் தொகுதி தனி அதிமுக வேட்பாளர் T S வேலு வெற்றி பெற்றார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் திரு டி.எஸ்.வேலு அவர்கள் அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கிரி. மற்றும் டி வி கே வேட்பாளர் பாரதி பின்னுக்கு தள்ளி 14036 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் முன்னாள் எம்எல்ஏ சாமிக்கண்ணு அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. வேலு அவர்கள் வெற்றி பெற்றவுடன் செங்கத்தில் உள்ள புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மற்றும் செங்கம் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலை. டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து செங்கம் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு நன்றியை தெரிவித்தார். அதிமுக சார்பாக நிர்வாகிகள் வான வேடிக்கையும் பட்டாசுகளையும் வெடித்து வரவேற்றனர். மாவட்டச் செய்தியாளர் பு. பிரபு
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே நாவக்குறிச்சியில் மாரியம்மன் மற்றும் கருப்புசாமி கோவில் விழா கோலாக்கலமாக நடைபெற்றது.

தலைவாசல் அருகே உள்ள நாவக்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன், மலையம்மன் மற்றும் பதினெட்டாம் படி கருப்பு சுவாமி கோவில்களில், பக்தர்கள் பங்கேற்ற பாரம்பரிய வழிபாட்டு நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன.விழாவையொட்டி நடைபெற்ற பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி, அக்னி சட்டி ஊர்வலம் மற்றும் மாரியம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் ஆகியவை பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. பக்தர்கள் பால்குடம் ஏந்தி வீதி வீதியாக ஊர்வலமாக சென்று, அம்மனுக்கு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்தனர்.மேலும், மாரியம்மன் மற்றும் பதினெட்டாம் படி கருப்பு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழாவின் ஒரு பகுதியாக, சித்ரா பௌர்ணமி தினத்தையொட்டி பக்தர்களுக்கு கூல் (மோர்/குளிர்பானம்) வழங்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இதனால் கோவிலுக்கு வந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.இந்த விழா கிராமத்தின் பாரம்பரியமும், பக்தி உணர்வும் ஒன்றிணைந்து நடைபெறும் முக்கிய ஆன்மீக நிகழ்வாக அமைந்தது.சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்
தலைவாசல் அருகே தனியார் பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது.

நாளை 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை – தலைவாசல் அருகே தனியார் பள்ளியில் ஏற்பாடுசேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் நாளை நடைபெற உள்ள 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணிகள் முழுமையான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற உள்ளதாக தேர்தல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த வாக்கு எண்ணிக்கையில் சேலம் மாவட்டத்திற்குட்பட்ட கெங்கவல்லி மற்றும் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.வேட்பாளர் விவரம்கெங்கவல்லி தொகுதி: 13 வேட்பாளர்கள்ஆத்தூர் தொகுதி: 15 வேட்பாளர்கள்வாக்காளர் விவரம்கெங்கவல்லி தொகுதிமொத்த வாக்காளர்கள்: 2,31,665ஆண் வாக்காளர்கள்: 1,12,591பெண் வாக்காளர்கள்: 1,19,065மூன்றாம் பாலினம்: 9ஆத்தூர் தொகுதிமொத்த வாக்காளர்கள்: 2,43,138ஆண் வாக்காளர்கள்: 1,17,645பெண் வாக்காளர்கள்: 1,25,473மூன்றாம் பாலினம்: 20மொத்த நிலை (இரு தொகுதிகள் சேர்த்து)மொத்த வாக்காளர்கள்: 4,74,803ஆண் வாக்காளர்கள்: 2,30,236பெண் வாக்காளர்கள்: 2,44,538மூன்றாம் பாலினம்: 29முக்கிய தகவல்தேர்தல் அதிகாரிகள் தெரிவித்ததாவது, வாக்கு எண்ணிக்கை பணிகள் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும். வேட்பாளர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் நேரடி கண்காணிப்புடன் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.நாளை 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை – தலைவாசல் அருகே தனியார் பள்ளியில் ஏற்பாடுசேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் நாளை நடைபெற உள்ள 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணிகள் முழுமையான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற உள்ளதாக தேர்தல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த வாக்கு எண்ணிக்கையில் சேலம் மாவட்டத்திற்குட்பட்ட கெங்கவல்லி மற்றும் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.வேட்பாளர் விவரம்கெங்கவல்லி தொகுதி: 13 வேட்பாளர்கள்ஆத்தூர் தொகுதி: 15 வேட்பாளர்கள்வாக்காளர் விவரம்கெங்கவல்லி தொகுதிமொத்த வாக்காளர்கள்: 2,31,665ஆண் வாக்காளர்கள்: 1,12,591பெண் வாக்காளர்கள்: 1,19,065மூன்றாம் பாலினம்: 9ஆத்தூர் தொகுதிமொத்த வாக்காளர்கள்: 2,43,138ஆண் வாக்காளர்கள்: 1,17,645பெண் வாக்காளர்கள்: 1,25,473மூன்றாம் பாலினம்: 20மொத்த நிலை (இரு தொகுதிகள் சேர்த்து)மொத்த வாக்காளர்கள்: 4,74,803ஆண் வாக்காளர்கள்: 2,30,236பெண் வாக்காளர்கள்: 2,44,538மூன்றாம் பாலினம்: 29முக்கிய தகவல்தேர்தல் அதிகாரிகள் தெரிவித்ததாவது, வாக்கு எண்ணிக்கை பணிகள் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும். வேட்பாளர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் நேரடி கண்காணிப்புடன் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்
பள்ளி கல்வித்துறை எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் தனியார் பள்ளிகளில் இணைய வழி கல்வி நடைபெறுகிறது.

கோவை: கோடை விடுமுறையில் சென்னை உட்பட சில மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் இணையதளம் வழியாக சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.தமிழக பள்ளிக் கல்வித் துறையின்கீழ் இயங்கும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் 17-ம் தேதி முதல் கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜூன் 1-ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன. அதற்கு முன்னதாக விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது. அவ்வாறு நடத்தினால் பள்ளிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.இந்நிலையில் சென்னை, நாமக்கல், கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் செயல்படும் தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு இணையவழியில் வகுப்புகள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.குறிப்பாக சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு,தாம்பரம், மேடவாக்கம் பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகள் வரும் கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுதும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போதே பாடங்களை நடத்தி தொடங்கிவிட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.அதேபோல், தினசரி பாடவேளைகள் குறித்த பள்ளிகளின் அட்டவணையும் சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கை பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து பெற்றோர்கள் சிலர் கூறுகையில், ‘‘பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் பல்வேறு தனியார் பள்ளிகள் இணையவழியில் வகுப்புகள் நடத்தி வருகின்றன.வழக்கமான வகுப்புகளை போல் தினமும் காலை 10 முதல் மாலை 4 மணி வரை பாடங்கள் நடத்துகின்றன. தொடர் வகுப்புகள் குழந்தைகளுக்கு கடும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
சுதந்திரம் பெற்று நூற்றாண்டை நெருங்குகின்றன. ஆனால் படிக்க வழி இன்றி தவிக்கும் ஏழை மாணவர்கள். அரசாங்கம் செவிசாய்க்குமா?

அரசு பள்ளியே இல்லை! மேல் நாரிப்பனூரில் கல்வி உரிமை பறிப்பு – அரசு கண்ணை மூடியதா?” மேல் நாரிப்பனூர் கிராமத்தில் அரசு பள்ளி இல்லாத அவலம் – மாணவர்கள் கல்வி எதிர்காலம் கேள்விக்குறி! கள்ளக்குறிச்சி, மே 2:கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகேயுள்ள மேல் நாரிப்பனூர் கிராமத்தில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் எதுவும் இல்லாத நிலை தொடர்ந்து நீடித்து வருவது, அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.அரசு கல்வி திட்டங்கள் “அனைவருக்கும் சம கல்வி” என வலியுறுத்தப்படும் நிலையிலும், இக்கிராமத்தில் அடிப்படை அரசு பள்ளி வசதியே இல்லாதது “கல்வி உரிமை பறிப்பு” என பொதுமக்கள் கடுமையாக குற்றம்சாட்டுகின்றனர்.தனியார் பள்ளிகளை மட்டுமே நம்பி வாழ வேண்டிய நிலை இருப்பதால், ஏழை மற்றும் நடுத்தர குடும்ப மாணவர்கள் அதிக கல்விச்செலவை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதனால் பலர் கல்வியை தொடர முடியாத அபாயமும் உருவாகியுள்ளது.மக்கள் தொகை விவரம் (மதிப்பீடு)மேல் நாரிப்பனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 3,500 முதல் 4,500 பேர் வசித்து வருகின்றனர். இதில் 600 முதல் 800 மாணவர்கள் பள்ளிக் கல்வி வயதினராக உள்ளதாக கூறப்படுகிறது.வாக்காளர் எண்ணிக்கைஇப்பகுதியில் சுமார் 2,200 முதல் 2,800 வாக்காளர்கள் உள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.மக்கள் கடும் வேதனை“எங்கள் கிராமத்தில் அரசு பள்ளி இல்லாமல் எங்கள் குழந்தைகள் தூரம் சென்று படிக்க வேண்டிய நிலை உள்ளது. இது எங்களின் பொருளாதாரத்தை முற்றிலும் சுமையாக மாற்றியுள்ளது” என கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.மாணவர்கள் பாதிப்புஅரசு பள்ளி அமைக்கப்பட்டால் குறைந்தது 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேரடியாக பயன் பெறுவார்கள் என்றும், சுற்றுவட்டார கிராமங்களையும் சேர்த்தால் 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி வாய்ப்பு பெறுவார்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.சமூக விமர்சனம்சுதந்திரம் பெற்ற பல தசாப்தங்கள் கடந்த பின்னரும் அடிப்படை கல்வி வசதி இல்லாத நிலை தொடர்வது “அமைப்பு தோல்வி” என சமூக ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர். உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையை நோக்கி குவிந்த வாகனங்களும் மக்கள் கூட்டங்களும்

திருவண்ணாமலையில் மாதந்தோறும் சாதாரண நாட்களிலும் பௌர்ணமி அன்றும் மக்கள் கூட்டம் கிரிவலம் சுற்றும் வழக்கம் ஆந்திரா. கேரளா. கர்நாடகா மற்றும் சில மாநிலங்களில் இருந்தும் பல வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் கிரிவலம் சுற்றுவது வழக்கம். அதுமட்டுமின்றி வெளிநாட்டவர்கள் ஆன்மீக பூமியான திருவண்ணாமலையின் ரமணாஸ்வரம் விசிறி சாமியார் ஆசிரமங்கள் மற்றும் இன்னும் சில ஆசிரமங்கள் சென்று யோகாவில் ஈடுபட்டு அமைதியான சூழ்நிலையையும் இந்து கலாச்சாரத்தையும் மிகவும் விருப்பத்துடன் பின்பற்றி வருகின்றனர். அது மட்டுமின்றி திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அதிகப்படியான சித்தர்கள் வாழ்வதாக கூறப்படுகிறது. கிரிவலம் சுற்றுவது மூலமாக மக்கள் வேண்டுதல் நிறைவேறுகின்றது என்று கூறப்படுகிறது. இதையொட்டி நேற்று 30/04/2026 இரவு 9:51 PM அளவில் சித்ரா பௌர்ணமி தொடங்கி இன்று 01/05/2026 இரவு 11:07 வரை நீடிக்கும். எனவே சாதாரண நாட்கள் மற்றும் பௌர்ணமி நாட்கள் சுற்றுவதை விட இந்த வருட சித்ரா பௌர்ணமி அன்று ஆயிரக்கணக்கான வாகனங்களில் லட்சக்கணக்கானோர் வருகை தந்துள்ளனர். இந்தச் சித்ரா பௌர்ணமி அன்று கிரிவலம் வருவதினால் இந்த வருடம் முழுவதும் கிரிவலம் வந்து விரதம் இருப்பதற்கு சமம் என்று நம்பப்படுகிறது. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பிற்காக திருவண்ணாமலைக்கு வருகை தந்துள்ளனர். வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் இன்றி அனைத்து வாகனங்களும் அங்கேயும் நிறுத்தப்பட்டு கிரிவலம் சுற்றி மீண்டும் தங்கள் ஊருக்கு செல்ல தவிக்கின்றனர். இதனால் திருவண்ணாமலை உள்ளூர் வாசிகளும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றன. மாவட்டச் செய்தியாளர். பு பிரபு