செய்தி: 27.07.2026
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம். இன்றும் தொடரும் 7 ஆம் நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே 10 முத்தூர் கிராமம் – கனிம கொள்ளையை தடுக்கத்தவறிய, விதிகளுக்கு புறம்பாக செயல்படும் அரசு புறம்போக்கு நிலத்தில் செயல்படும், 1000 கோடிக்கு மேல் வருவாய் இழப்பை ஏற்படுத்திய கல்குவாரிகளை நிறுத்தாமல் இழுத்தடிக்கும் – கோவை மாவட்ட நிர்வாகத்தையும், கனிம துறையையும் கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் இருக்கும் விவசாயி முருகானந்ததிற்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்கும் வரை வரும் 29.07.2026 புதன் கிழமை, காலை 10 மணி – முதல் ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் கனிம கொள்ளைக்கு எதிரான கூட்டியக்கம் கிணத்துக்கடவு சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கம்.
நாவக்குறிச்சி ஏரியில் சட்டவிரோதமாக மண் கொள்ளை.

நாவக்குறிச்சி ஏரியில் சட்டவிரோத மண் கொள்ளையா?மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள நாவக்குறிச்சி கிராம ஏரியில் வண்டல் மண் எடுப்பதற்கு அதிகாரப்பூர்வ அனுமதி பெற்றவர்கள், அனுமதிக்கப்பட்ட அளவை மீறி கிராவல் மண் உள்ளிட்ட மண்ணையும் சட்டவிரோதமாக அள்ளி விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.பொதுமக்கள் கூறுகையில், கடந்த ஆட்சிக் காலத்திலேயே ஏரியில் இருந்து அதிகளவில் வண்டல் மண் மற்றும் கிராவல் மண் எடுக்கப்பட்டதால், ஏரியின் பல பகுதிகளில் பாறைகள் வெளிப்படும் அளவுக்கு ஆழமான பள்ளங்கள் உருவாகியுள்ளன. மேலும், சில இடங்களில் கிணறு போன்ற ஆழமான குழிகளும் தோண்டப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.தற்போது, வண்டல் மண் எடுப்பதற்கான அனுமதியை பயன்படுத்தி, கிராவல் மண்ணையும் சட்டவிரோதமாக அள்ளி விற்பனை செய்து வருவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.மேலும், ஏரியில் உள்ள நான்கு கிணறுகள் மற்றும் பிற நீராதாரங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக கிராம மக்களின் குடிநீர் ஆதாரம் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.எனவே, சேலம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, ஏரியில் எவ்வளவு அளவு மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது, இதுவரை எவ்வளவு மண் எடுக்கப்பட்டுள்ளது என்பதை கணக்கிட்டு, சட்டவிரோத மண் அள்ளுதலை உடனடியாக தடுத்து நிறுத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாவக்குறிச்சி கிராம பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். சேலம் செய்தியாளர் பாலமுருகன்
S.P.வேலுமணியால் நடந்த சதி.. மேடையில் கண்ணீர் விட்டு அழுத கோவை அதிமுக மாவட்ட செயலாளர். செ.ம .வேலுச்சாமி :
கோவை : கோவை அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் அந்தக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான செ.ம. வேலுசாமி,“அதிமுக ஆலமரம் போன்றது. தமிழகத்தை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி. தூய சக்தி என கூறி தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. தற்போது அந்த கட்சியின் பெண் வழக்கறிஞர் ஒருவரே, தமிழகம் முழுவதும் பணம் பெற்று கொண்டு அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டதாக வழக்கு தொடர்ந்துள்ளார்.கட்சி தொடங்கியதில் இருந்தே நான் பதவியுடன் இருந்தேன். கடந்த 13 வருட காலமாக கட்சியில் பதவியின்றி பல்வேறு அவமானங்களை சந்தித்தேன். பல கட்சிகளில் இருந்து எனக்கு அமைச்சர், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பதவிகளை தர முன்வந்தனர். பணம் கொடுத்தும் என்னை அழைத்தனர். நான் எந்த கட்சிக்கும் செல்லவில்லை. எங்கோ இருந்த என்னை சட்டமன்றத்திற்கு அனுப்பி அமைச்சராக்கியதும், பிறகு மேயராக்கியதும் இந்த கட்சி தான். எனக்கு அவமானம் ஏற்படும்போது வேறு எங்காவது சென்று விடலாமா என்று யோசித்துள்ளேன் என்றும் கண்ணீர் மல்க பேசினார்.
படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் திருக்கோவிலில் சிறப்பு பூஜை.

போளூர் வடக்கு ஒன்றியம் சார்பாக பொதுச் செயலாளர் புஷி ஆனந்த் அவர்கள் பிறந்தநாள் முன்னிட்டு படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் திருக்கோவில் சிறப்பு பூஜையும் மற்றும் அன்னதானம் நடைபெற்றது போளூர் வடக்கு ஒன்றிய செயலாளர் V.S.அன்பு முன்னேனில் சிறப்பாக நடைபெற்றது கழகத் தோழர்கள் ஒன்றிய பொருளாளர் முபாரக் ஒன்றிய துணைச் செயலாளர் அஜித் படவேடு கிளைச் செயலாளர் அன்பு மற்றும் ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். காசப்பாக்கம் செய்தியாளர் வெங்கடேசன்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் அனைத்து லாரி உரிமையாளர்களும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆதவா அர்ஜுனாவிடம் மனு அளித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக விளையாட்டுத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ அர்ஜுனா அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் செங்கம் வட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் ஏரி வண்டல் மண் எடுத்து செங்கம் வட்டத்தில் உள்ள விவசாயப் பணிகளை தடையின்றி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு ஏதுவாக இருந்து வந்தது என்றும் கடந்த இரண்டு மாதங்களாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தடை உத்தரவின் பேரில் எந்த ஒரு டிப்பர் லாரியும் இயங்காமல் டிப்பர் லாரி ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் இன்றி மிகவும் பெருத்த கஷ்டத்திலும். நஷ்டத்திலும் சுமார் 100க்கும் மேற்பட்ட டிப்பர் லாரி உரிமையாளர்களும்.ஓட்டுநர்களின் குடும்பமும். மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து வருகிறது. தற்போதுள்ள தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்த விவசாய மக்களுக்கு ஏரி வண்டல் மண். மற்றும் பொதுமக்கள் வீட்டு பயன்பாட்டிற்காக கிராவல் மண் அரசாணை rule 12(2) மற்றும்12 (2-A)கொடுக்கப்பட்ட உத்தரவின் பெயரில் கம்மாய். ஏரி. குளம். மற்றும் நீர்த்தேக்கங்களில் இருந்து களிமண். வண்டல் மண். சவுடு. சரலை . போன்றவை விவசாயம். மண்பாண்டம் செய்வதற்காகவும். மற்றும் சொந்த வீடு பயன்பாட்டுக்காகவும். எடுத்துச் செல்ல அரசாணை வழங்கி உள்ளார். அதன்படி லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சார்பாக மாண்புமிகு அமைச்சர் அவர்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பரிந்துரை செய்து டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் தடையின்றி தொடர வழிவகை செய்யுமாறும் மனுவில் கொடுக்கப்பட்டுள்ளன. செய்தியாளர் P. பிரபு
4 ஏக்கர் கரும்பு எரிந்து சாம்பல் ஆனது விவசாயி வேதனை.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் அல்லியந்தல் கிராமம் வேலு என்பவரின் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட சுமார் -4 ஏக்கரில் பரப்பளவு உள்ள அறுவடை செய்ய தயாராக இருந்த சுமார் 150 டன்.கரும்பு முற்றிலும் எதிர்பாராத விதமாக தீப்பற்றி அனைத்தும் தீயில் கருகி எரிந்துவிட்டது…!!!பாதிக்கப்பட்ட விவசாய குடும்பத்திற்கு தமிழக அரசுக்கு உதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளன காசப்பாக்கம் செய்தியாளர் M. வெங்கடேசன்
மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் 52 ஆவது பிறந்தநாள் திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.

மாண்புமிகு தமிழகத்தின் முதலமைச்சர்திரு C ஜோசப் விஜய் அவர்களின் 52- வது பிறந்தநாள் முன்னிட்டு திருவண்ணாமலை மேற்கு மாவட்டம் செயலாளர் அண்ணன் GK கதிரவன் அவர்கள் தலைமையில் போளூர் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பு அவர்களின் முன்னேற்பாட்டில் புகழ்பெற்ற ரேணுகாம்பாள் திருக்கோயில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது!!உடன் பார்த்திபன் மாவட்ட துணைச் செயலாளர் ராஜேஷ் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ராஜசேகர் மாவட்ட மக்கள் இயக்கம் பாண்டியன் மாவட்ட வர்த்தக அணி இணை அமைப்பாளர் வெங்கடேஷ் மாவட்ட ஊடாக அணி அமைப்பாளர்…மற்றும் படவேடு ஒன்றிய & கிளை நிர்வாகிகள்
கோவை: பள்ளிக்கல்வித் துறையில் முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம்!
கோவை: பள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக காரணங்களுக்காக முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, 2023 ஆகஸ்ட் முதல் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த பாலமுரளி, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேபோல், 2025 நவம்பர் முதல் சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த மகேஸ்வரி, கோவை மாவட்டத்தின் புதிய முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறுவாச்சூரில் துர்க்கை அம்மன்- அய்யனார் சுவாமி தேரோட்டம்.

சிறுவாச்சூரில் துர்க்கை அம்மன்–அய்யனார் சுவாமி தேரோட்டம்ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.தலைவாசல், ஜூலை 1–சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராமத்தில் அருள்மிகு துர்க்கை அம்மன்–அய்யனார் சுவாமி கோவில் ஆண்டு திருவிழாவையொட்டி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.திருவிழாவையொட்டி அதிகாலை முதல் கோவிலில் துர்க்கை அம்மன் மற்றும் அய்யனார் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மலர்கள் மற்றும் வண்ண அலங்காரங்களால் அழகுபடுத்தப்பட்ட தேரில் சுவாமிகள் எழுந்தருளினர்.அதனைத் தொடர்ந்து மேளதாளம் முழங்க, வேத மந்திரங்கள் ஒலிக்க, ஊர் பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் “அம்மன் அரோகரா”, “அய்யனார் அரோகரா” என்ற பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேருக்கு பெண்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர். பக்தர்கள் தேங்காய் உடைத்து, மலர் தூவி, நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.தேரோட்டத்தைக் காண சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவரும் சாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர்.விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருந்தன. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், அவசரகால சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணியில் ஈடுபட்டு, தேரோட்டம் சீரும் சிறப்புமாக நடைபெற ஒத்துழைத்தனர்.சேலம் கிழக்கு மாவட்ட நிருபர் பாலமுருகன்
கோவை : நஞ்சுண்டாபுரத்தில் இருந்து வெள்ளலூருக்கு திட்டச்சாலை; மாநகராட்சி முயற்சித்தால் உருவாக்கலாம்:
கோவை: கோவையில் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்ல பிரதான ரோடுகளையே பயன்படுத்த வேண்டியிருக்கிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, இணைப்பு சாலைகள், திட்ட சாலைகள் ஏற்படுத்த வேண்டும். குறைந்த பட்சமாக ஆண்டுக்கு 5 இணைப்பு சாலைகள் ஏற்படுத்த தொழில் துறையினர் கோருகின்றனர்.மனைப்பிரிவு அனுமதி பெறும்போது, வளர்ச்சி கட்டணமாக கோவை மக்கள் செலுத்திய தொகை, நகர ஊரமைப்புத் துறையில் கோடிக்கணக்கில் இருக்கிறது.அத்தொகையை கேட்டுப் பெற்று சாலைகள் உருவாக்க வேண்டும். ராமநாதபுரத்தில் இருந்து வெள்ளலுார் செல்லும் வாகன ஓட்டிகள், நஞ்சுண்டாபுரம் ரயில்வே பாலத்துக்கு கீழே உள்ள கரடுமுரடான ரோட்டில் செல்கின்றனர். இருபுறமும் புதர் மண்டி கிடக்கிறது; தெருவிளக்கு வசதி இல்லை என்பதால் இரவில் இந்த பாதையை பயன்படுத்துவது ஆபத்தானது. போத்தனுார் வழியாக வெள்ளலுார் செல்வது சுற்றுப்பாதை; பல கி.மீ. அலைய வேண்டும். நஞ்சுண்டாபுரம் மயானம் அருகே உள்ள வழித்தடத்தில் வெள்ளலுார் செல்ல, 60 அடி திட்டச்சாலை உருவாக்க, உள்ளூர் திட்ட குழுமத்தில் திட்ட வரைவு உள்ளது. ரயில்வே கேட் கடந்ததும் கந்தன் பிள்ளையார் ரோட்டின் இருபுறமும் நிலம் கையகப்படுத்தி, நொய்யல் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டினால் இணைப்பு சாலை கிடைக்கும்.வெள்ளலுாரில் இருந்தும், ராமநாதபுரத்தில் இருந்தும் வாகன ஓட்டிகள் சென்று வரலாம். அப்பகுதி விவசாயிகள் தாமாக முன்வந்து நிலம் தர முன்வருகின்றனர். மாநகராட்சி முயற்சித்து செயல்படுத்தினால் புதிதாக திட்டச்சாலை உருவாக்கலாம். மக்களின் அவஸ்தையை போக்கலாம்.