ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.

30/04/26சிறுவாச்சூர் அருகே அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் – பக்தர்கள் திரள், பிரம்மாண்ட அன்னதானம்!சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே அமைந்துள்ள சிறுவாச்சூர் திருவள்ளுவர் நகர் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகா முத்து மாரியம்மன், ஸ்ரீ துர்க்கை அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் விழா இன்று ஊர் பொதுமக்கள் சார்பில் மிகுந்த விமரிசையாக நடைபெற்றது.அதிகாலை முதலே யாகசாலை பூஜைகள், வேத மந்திர ஓதங்கள் நடைபெற்று, கலசங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டன. பின்னர் காலை சிறப்பு நேரத்தில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் அபிஷேகம் செய்யப்பட, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மன் தரிசனம் செய்து ஆனந்தமடைந்தனர்.விழாவை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களின் திரளான பங்கேற்பு காணப்பட்டது. இதையடுத்து ஊர் பொதுமக்கள் சார்பில் பிரம்மாண்டமான அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டு, நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் சுற்றுவட்டார கிராம மக்கள், பக்தர்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் வாகன நெரிசலில் சிக்கி தவிக்கும் பொதுமக்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்திலிருந்து போளூர் செல்லும் கனரக வாகனங்கள் பஜார் வழியே செல்வதினால் பாமர மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படுகின்றன. அந்த சாலை குறுகிய சாலையாக உள்ளதால் இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் ஒதுங்குவதற்கு கூட இடமில்லாமல் தவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ரோட்டோரம் உள்ள கடைக்காரர்களும் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த வாகன நெரிசலை தவிர்க்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். வெப்பம் அதிகமாக உள்ளதால் மாலை நேரங்களில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்க வருகின்றனர் எனவே கனரக வாகனங்களை மாலை நேரங்களில் சில மணி நேரம் டவுனுக்கு வெளியே நிற்க வைத்து மக்கள் கூட்டம் குறையும் சமயத்தில் வாகனங்களை செல்ல விடலாம் என்று பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு உள்ளது. திருவண்ணாமலை செய்தியாளர் எம். சங்கர்.
ஆட்டுப்பட்டிக்குள் நுழைந்த சிறுத்தை ஆறு ஆடுகளை கடித்துக் கொன்றது.

சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் கொளத்தூர் ஒன்றியம் காவேரிபுரம் ஊராட்சிக்கு சொந்தமான குத்தேரிகள்காடு சின்னத்தம்பி என்பவரின் பட்டிக்குள் புகுந்து 6 ஆட்டுக்குட்டிகளை சிறுத்தை கடித்து கொன்றது இது சம்பந்தமாக வனத்துறை அதிகாரிக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே 38 ஆம் ஆண்டு தேர் திருவிழா

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பட்டுத்துறை ரோட்டில் அமைந்துள்ளஅருள்மிகு விநாயகர் சமயபுரத்து மாரியம்மன் திருக்கோவில் 38ஆம் ஆண்டு தேர் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பக்தர்கள் பலர் கலந்து கொண்டு, பக்தி பரவசத்தில் தேர் இழுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்
2019 ஆம் ஆண்டு காவல்துறையால் நடைபெற்ற இரட்டைக் கொலை

நீதிமன்றம் ஆயில் தண்டனை வழங்கியது பணியை இழந்த நியாயமான காவல்துறை அதிகாரி தற்போது செய்ய வேண்டியவை இதுவே…1. அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாப்பு (Article 311)அரசு ஊழியர் ஒருவர் “டிஸ்மிஸ்” (Dismissal) செய்யப்படும்போது, அவர் எதிர்காலத்தில் எந்த அரசுப் பணியிலும் சேர முடியாது. இது ஒரு நபரின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் மிகக்கடுமையான தண்டனை என்பதால், நீதிமன்றம் இதில் அதிக கவனம் செலுத்தும்.ஒருவேளை நீதிமன்றம் உங்கள் மீதான குற்றச்சாட்டை ரத்து செய்துவிட்டால், அரசு வழங்கிய “நிரந்தர பணி நீக்க உத்தரவு” (Dismissal Order) சட்டப்படி செல்லாததாகிவிடும்.அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்ட அடுத்த கணமே, நீங்கள் மீண்டும் பழைய பணியில் தொடர தகுதியுடையவர் ஆகிறீர்கள்.2. “Dismissal” vs “Removal”பணி நீக்கத்தில் இரண்டு வகைகள் உண்டு:Removal: பணியிலிருந்து நீக்குதல் (இவர் வேறு அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்).Dismissal: நிரந்தர பணி நீக்கம் (இவர் இனி எந்த அரசுப் பணியும் செய்ய முடியாது).இந்த இரண்டு வகை நிரந்தரத் தண்டனைகளுக்கும் FR 54 (Fundamental Rule 54) மற்றும் Article 311 ஆகியவை தீர்வாக அமையும்.3. நீதிமன்றம் எப்போது தலையிடும்?நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்ட ஒருவர் பின்வரும் காரணங்களுக்காக நீதிமன்றத்தை நாடி மீண்டும் பணியைப் பெறலாம்:Natural Justice: எனக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை.Lack of Evidence: என் மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை.Malafide Intent: உள்நோக்கத்துடன் பழிவாங்கப்பட்டேன்.Acquittal: கிரிமினல் வழக்கில் நான் (குற்றமற்றவர்) எனத் தீர்ப்பு வந்துவிட்டது.4. அடுத்த கட்ட நடவடிக்கை (The Remedy)நிரந்தர பணி நீக்க உத்தரவை எதிர்த்து நீங்கள் வழக்குத் தொடரும்போது (Writ Petition), நீதிமன்றம் அந்த உத்தரவை “Quash” (ரத்து) செய்யும். உத்தரவு ரத்து செய்யப்பட்டால், அரசு உங்களை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.முக்கியமான குறிப்பு:டிஸ்மிஸ் செய்யப்பட்ட அதிகாரி நிரந்தரமாகப் பணியை இழந்துவிட்டாலும், அவர் நீதிமன்றம் சென்று “தவறான பணிநீக்கம்” என்று நிரூபித்துவிட்டால், அவர் இழந்த பணி, தகுதி மற்றும் ஊதியம் அனைத்தையும் திரும்பப் பெறச் சட்டத்தில் வழி உண்டு.எனவே, “நிரந்தர பணி நீக்கம்” என்பது இறுதியானது அல்ல; அதைச் சட்ட ரீதியாக உடைக்க முடியும். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றத் தீர்ப்புடன் முறையான மனு (Representation) அளிப்பதே இதற்கான முதல் தீர்வாகும்.
செங்கத்தில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் 25/04/2026 ஒன்றியம் தலைமை ஆசிரியர்கள் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு செங்கம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) கோ.முருகன் தலைமையில் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நீ. கோபி ஏற்பாட்டில் பணி நிறைவு பாராட்டு விழா செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக செங்கம் வட்டாட்சியர் தனி (ஆதி.ந.பி) சி.முனுசாமி கலந்து கொண்டு பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு நினைவு கேடயங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.உடன் இந்நிகழ்ச்சியில் சுற்று வட்டார ஆசிரியப் பயிற்றுநர்கள் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரிய பெறுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.பின்னர் செங்கம் வட்டார கல்வி அலுவலர் சி. பிரகாஷ் நன்றியுரையாற்றினார். மாவட்டச் செய்தியாளர் எம்.சங்கர்
திருவண்ணாமலை மாவட்டம் ஊராட்சி செயலாளரை ஊர் பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் தென்முடியனூர் ஊராட்சிக்கு புதிதாக கூடுதல் பொறுப்பு வகிக்கும் ஊராட்சி செயலர் திரு ராஜசேகர் அவர்கள் வருகைக்குப் பிறகு நமது ஊராட்சியில் அனைத்து அடிப்படை வசதிகளும் மற்றும் தேர்தல் பணியும் மிக சிறப்பாக நடைபெற்றது இதை ஊர் பொதுமக்கள் அனைவரும் வெகுவாக பாராட்டி ஊராட்சி செயலர் அவர்களின் பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தார்கள் என்பதையும் இவர் மிகச் சிறப்பாக செயல்படுவதால் எங்கள் ஊராட்சிக்கு தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளார்கள். தண்டராம்பட்டு செய்தியாளர் V. சத்தியசீலன்
ஆத்தூர் அருகே சப் இன்ஸ்பெக்டர் திடீர் மரணம்

23/04/26ஆத்தூர் அருகே சப்-இன்ஸ்பெக்டர் திடீர் மரணம் – காவல்துறையில் சோகம்சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மல்லியகரை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் (58) மாரடைப்பால் உயிரிழந்தார்.தேர்தல் பணிக்காக நாயக்கியம்பட்டி பகுதிக்கு சென்றிருந்த அவர், இன்று இரவு சுமார் 8.30 மணியளவில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.அவரது திடீர் மறைவு காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஆழ்ந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்
திருவண்ணாமலை மாவட்டத்தில் TVK வேட்பாளரை வாக்குச்சாவடிக்குள் நுழையவிடாமல் தடுத்த திமுகவினர்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா மேல்பெண்ணாத்தூர் கிராமத்தில் இன்று தேர்தல் நடக்கும்போது T V K வேட்பாளர் பாரதிதாசனை பூத்துக்கு சென்று பார்வையிடும் போது உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்திய திமுக நிர்வாகிகள் பாரதிதாசன் ஆர்வலர்கள் ஏன் தடுக்குறீங்கள் என்று கேட்கும் போது வாக்குவாதம் முட்டி அடிதடியாக மாறியது T V K கட்சியின் பொறுப்பாளர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் பெண்ணாத்தூர் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. மாவட்டச் செய்தியாளர் M. சங்கர்
கோவை.அ.தி.மு.க.வேட்பாளர் தர்ணா
செந்தில் பாலாஜி தொகுதியில் தேர்தலை ரத்து பண்ணுங்க! அதிமுக வேட்பாளர் தர்ணா. கோவை தெற்கில் பரபரப்பு: கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் தனது ஆதரவாளர்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் வாக்காளர்களுக்கு தொடர்ந்து பணப்பட்டுவாடா நடந்து வருவதாகவும், ஆனால் பணம் கொடுப்பவர்களை பிடித்து கொடுத்தாலும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு வைத்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் கடந்த முறை கரூரில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி களம் காண்கிறார். அதிமுக சார்பில் அம்மன் அர்ஜுனன் போட்டியிடுகிறார். இந்த நிலையில் தான் அம்மன் அர்ஜுனன் கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை ரத்து செய்யுமாறு கூறி தர்ணாவில் ஈடுபட்டு இருக்கிறார்