🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் அல்லியந்தல் கிராமம் வேலு என்பவரின் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட சுமார் -4 ஏக்கரில் பரப்பளவு உள்ள அறுவடை செய்ய தயாராக இருந்த சுமார் 150 …

மாண்புமிகு தமிழகத்தின் முதலமைச்சர்திரு C ஜோசப் விஜய் அவர்களின் 52- வது பிறந்தநாள் முன்னிட்டு திருவண்ணாமலை மேற்கு மாவட்டம் செயலாளர் அண்ணன் GK கதிரவன் அவர்கள் தலைமையில் போளூர் வடக்கு …

கோவை: பள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக காரணங்களுக்காக முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, 2023 ஆகஸ்ட் முதல் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த பாலமுரளி, …

சிறுவாச்சூரில் துர்க்கை அம்மன்–அய்யனார் சுவாமி தேரோட்டம்ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.தலைவாசல், ஜூலை 1–சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராமத்தில் அருள்மிகு துர்க்கை அம்மன்–அய்யனார் சுவாமி …

கோவை: கோவையில் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்ல பிரதான ரோடுகளையே பயன்படுத்த வேண்டியிருக்கிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, இணைப்பு சாலைகள், திட்ட சாலைகள் ஏற்படுத்த வேண்டும். குறைந்த பட்சமாக …

முக்கிய செய்தி

கோவையில் அரை நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம் மீட்பு: பாலியல் கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

25 முதல் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் அரை நிர்வாண நிலையில், அழுகிய சடலமாக கிடந்தது கண்டறியப்பட்டது.சிதைந்த முகம் – அடையாளம் காண்பதில் சிக்கல்..மீட்கப்பட்ட பெண்ணின் முகம் முற்றிலும் சிதைந்த நிலையில் காணப்படுவதால், அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரங்களை உடனடியாகக் கண்டறிய முடியவில்லை.அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற பலத்த சந்தேகமும் எழுந்துள்ளது. தீவிரமடையும் போலீஸ் விசாரணை.. சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் தடயவியல் துறை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு கிடைத்த முக்கிய ஆதாரங்கள் மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காகவும், பாலியல் வன்கொடுமை ஏதேனும் நடந்துள்ளதா என்பதை மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தவும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.குனியமுத்தூர் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் முடுக்கிவிட்டுள்ளனர். கடந்த சில தினங்களில் கோவையில் மாயமான பெண்களின் விபரங்களை வைத்து போலீசார் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்

சேலத்தில் 22 ஆம் ஆண்டு மெகா பரிசளிப்பு விழா.

சேலத்தில் 22-வது ஆண்டு மெகா பரிசளிப்பு விழா நாளை நடைபெறுகிறதுசேலம்:தமிழ்நாடு வீரசைவப் பேரவை, தலைமை ஜங்கம் சமூக நலச்சங்கம் மற்றும் நாகரத்தினம் அங்காளம்மாள் கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்தும் 22-வது ஆண்டு மெகா பரிசளிப்பு விழா நாளை (ஜூன் 28) காலை 10 மணிக்கு சேலம் சீல்நாயக்கன்பட்டி பைபாஸ் அருகிலுள்ள சந்திரா மகாலில் நடைபெறுகிறது.இவ்விழாவில் 2026-ம் ஆண்டு அரசு பொதுத் தேர்வுகளில் 80 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண்கள் பெற்ற 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர்.மேலும் மகான் பசவண்ணர் ஜெயந்தி விழா, அகில இந்திய வீரசைவ மகாசபை தலைவருக்கான பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழாக்களும் இணைந்து நடைபெறுகின்றன. மயிலம் பொம்மபுரம் ஆதீனம் பட்டம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் அருளாசி வழங்கியுள்ளனர்.விழாவில் அகில இந்திய வீரசைவ மகாசபை தலைவரும், கர்நாடக மாநில வனத்துறை அமைச்சருமான ஈஸ்வர் பி. கண்ட்ரே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார். அகில இந்திய வீரசைவ மகாசபை பொதுச் செயலாளர் ரேணுகா பிரசன்னா உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர்.தமிழ்நாடு வீரசைவப் பேரவை மாநிலத் தலைவர் நாகரத்தினம், தலைமை ஜங்கம் சமூக நலச்சங்க மாநிலத் தலைவர் ஏ.கே. நாகராஜன், அகில இந்திய வீரசைவப் பேரவை மாநில பொதுச் செயலாளர் பாலாஜி, பொருளாளர் விவேகானந்தன், மாநில பொதுச் செயலாளர் கலியமூர்த்தி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், இளைஞர் அணி, மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.தகுதியுள்ள மாணவ, மாணவியர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் விழாவில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்

வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் வால்பாறை மக்களின் நலன் கருதி பொள்ளாச்சி அறம் மருத்துவமனை நடத்தும் மருத்துவ முகாம் :

இன்று வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் வால்பாறை மக்களின் நலன் கருதி பொள்ளாச்சி அறம் மருத்துவமனை மற்றும் அறம் அறக்கட்டளை சார்பாக பல்வேறு மருத்துவ சிகிச்சைகளுக்கு முகாம் நடைபெற்றது இம்முகாமை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் மதிப்புமிகு குட்டி@சுதாகர் அவர்கள் கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தார் இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் சிவன் ராஸ், மற்றும் பொள்ளாச்சி அறம் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நகர அவைத் தலைவர் C.செல்லமுத்து துணை செயலாளர் P.சூரிய பிரபா நகர மன்ற உறுப்பினர்கள்JBR. பாஸ்கர் GKM.மகுடீஸ்வரன், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் KPS.சத்தியமூர்த்தி மற்றும் ஆர்.கே.குமார், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கோவை பொன்னான் ஆகியோர் கலந்து கொண்டனர்

திருவண்ணாமலை மாவட்டம் தா.வெ.க மாவட்டச் செயலாளர் பிறந்தநாள் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

த.வெ.க மாவட்ட கழக செயலாளர் *பிறந்தநாள் நிகழ்ச்சி:-*தமிழக வெற்றிக் கழகம் திருவண்ணாமலை மேற்கு மாவட்ட செயலாளர் GK கதிரவன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சி மாவட்ட நிர்வாகிகளின் மூலம் சிறப்பாக கொண்டாடப்பட்டது…நிகழ்ச்சியில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். மேலும் நல திட்ட உதவிகளும் வழங்கினார். …நிகழ்ச்சியில் வீரவாள் கழக தோழர்கள் பரிசளித்தார்….மேலும் கொள்கை தலைவர்களின் ஒருவரான பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் திருவுருவம் சிலையை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக வழங்கப்பட்டது கலசப்பாக்கம் செய்தியாளர் M. வெங்கடேசன்

விபத்தை ஏற்படுத்தியதாகமாநகராட்சி துணை ஆணையாளர் கைது

மங்கலம் , ஜூன். 20கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 49). இவர் தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையராக பணியாற்றி சில மாதங்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கடந்த 10-ந் தேதி இவர் தனது காரில் பல்லடத்தில் இருந்து மங்களம் நோக்கி வந்து கொண்டிருந்தார். இவருடைய கார், மங்கலம் நால்ரோடு அருகே வந்தது. அப்போது மங்களம் பகுதியைச் சேர்ந்த ஹக்கீம் (52) என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது சரவணகுமார் ஓட்டி வந்த கார் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஹக்கீம் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சரவணகுமார் மது போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. இதை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

DVAC | RTO | Raid | RTO அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.37.81 லட்சம் பறிமுதல்

R.T.O அலுவலகங்களில் ரெய்டு – ரூ.37.81 லட்சம் பறிமுதல் தமிழகம் முழுவதும் 40 RTO அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை சந்தேகத்திற்குரிய வகையில் ரூ.5.95 லட்சம் ஆன்லைன் பரிவர்த்தனைகள்

சேலம் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக(SP) ஐபிஎஸ் அதிகாரி எஸ். குத்தாலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக குத்தாலிங்கம் பொறுப்பேற்புசேலம், ஜூன் 19:சேலம் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி.) ஐ.பி.எஸ். அதிகாரி எஸ். குத்தாலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் அண்மைய ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்ற உத்தரவின் அடிப்படையில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்கு முன்பு சென்னை பெருநகர காவல்துறையில் தி.நகர் துணை ஆணையராக பணியாற்றிய குத்தாலிங்கம், தற்போது சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த கவுதம் கோயல், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.புதிய எஸ்.பி. குத்தாலிங்கம் தலைமையில் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை மேலும் வலுப்படுத்துதல், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல், பொதுமக்கள் குறைகளை விரைந்து தீர்த்தல் மற்றும் போக்குவரத்து ஒழுங்கை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் புதிய காவல் கண்காணிப்பாளருக்கு வாழ்த்துகளை தெரிவித்து, மாவட்டத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்துவார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்

அட்மா (ATMA) திட்டத்தின் கீழ் மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணை பள்ளி பயிற்சி நடைபெற்றது.

மக்காச்சோள பயிர் மேலாண்மை குறித்த பண்ணைப் பள்ளி பயிற்சிதலைவாசல், ஜூன் 17:சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டாரத்திற்குட்பட்ட காமக்காபாளையம் கிராமத்தில், அட்மா (ATMA) திட்டத்தின் கீழ் மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணைப் பள்ளி பயிற்சி நடைபெற்றது.பயிற்சிக்கு தலைவாசல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வேல்முருகன் தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.அவர் பேசுகையில், “தலைவாசல் வட்டார விவசாயிகள் ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து, இயற்கை வழி வேளாண்மைக்கு மாற வேண்டும். மண்ணின் வளத்தைப் பாதுகாத்து, சாகுபடி செலவைக் குறைப்பதன் மூலம் விவசாயிகள் தங்களது வருமானத்தை இரட்டிப்பாக்க முடியும்,” என்றார்.தொடர்ந்து, பயிற்சியாளர் பிரவீன், முறையான மண் மாதிரி சேகரிப்பு முறைகள் மற்றும் அதன் அவசியம் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தார். மேலும், பயிற்சியாளர் வரதராஜன், தரமான விதைத் தேர்வு மற்றும் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் நுண்ணீர் பாசன முறைகளின் முக்கியத்துவம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.இப்பயிற்சியில் கலந்து கொண்ட உதவி வேளாண்மை அலுவலர் ரவிக்குமார், வேளாண்மைத் துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு அரசு நலத்திட்டங்கள் மற்றும் நடப்பு மானிய விவரங்கள் குறித்து விளக்கமளித்தார்.பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரமேஷ் மற்றும் முத்துவேல் ஆகியோர் செய்திருந்தனர். இதில் காமக்காபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட முற்போக்கு விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று பயனடைந்தனர்.சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்

திருப்பத்தூர் இணைப்பதிவாளர் அலுவலகம்-2-ல் தொடரும் சர்ச்சைகள்.

*திருப்பத்தூர் இணைபதிவாளர் அலுவலகம்-2-ல் தொடரும் சர்ச்சைகள்**சார் பதிவாளர் ஷர்மிளா மீதான புகார்கள் குறித்து லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என வலுக்கும் கோரிக்கை*திருப்பத்தூர்-சேலம் பிரதான சாலையில் அமைந்துள்ள திருப்பத்தூர் இணைபதிவாளர் அலுவலகம்-2-ல் பணியாற்றி வரும் சார் பதிவாளர் ஷர்மிளா தொடர்பாக அண்மைக்காலமாக பல்வேறு சர்ச்சைகள் மற்றும் புகார்கள் எழுந்து வருவது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான இடத்தை போலி ஆவணங்கள் மூலம் தனிநபர்களுக்கு பதிவு செய்து கொடுத்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில், பதிவுத்துறையைச் சேர்ந்த அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அந்த விவகாரத்துடன் தொடர்புடைய அனைத்து அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்தும் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.இந்த நிலையில், திருப்பத்தூர் இணைபதிவாளர் அலுவலகம்-2-ல் பத்திரப்பதிவுகளின் போது புரோக்கர்கள் மூலமாக சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் நடைபெறுவதாகவும், இதன் மூலம் பெருமளவில் பணம் வசூலிக்கப்படுவதாகவும் பல்வேறு தரப்பினரால் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த புகார்கள் தொடர்பாக ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு, பதிவுத்துறையில் நடைபெறுவதாகக் கூறப்படும் லஞ்சம் மற்றும் முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தி, பொறுப்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.இதற்கிடையே, திருப்பத்தூர் இணைபதிவாளர் அலுவலகம்-1-ல் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாகவே உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்து சார் பதிவாளர் ஷர்மிளா அலுவலகத்தை விட்டு வெளியேறியதாகக் கூறப்படும் சம்பவம் பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.மேலும், லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் மேற்கொண்ட ஆய்வு தொடர்பான தகவல்கள் முன்கூட்டியே சிலருக்கு தெரியவந்ததா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அதற்காக அலுவலக வருகைப் பதிவேடுகள், கண்காணிப்பு கேமரா பதிவுகள், மருத்துவ ஆவணங்கள், அலுவலக கணினி பதிவுகள் மற்றும் அதிகாரப்பூர்வ தகவல் பரிமாற்றங்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.சட்ட வல்லுநர்களின் கருத்துப்படி, பொது ஊழியர்களின் செயல்பாடுகள் தொடர்பாக எழும் புகார்கள் ஆரம்பகட்ட ஆதாரங்களால் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், ஊழல் தடுப்புச் சட்டம், 1988, பாரதிய நியாய சன்ஹிதா, 2023, பதிவுச் சட்டம், 1908 மற்றும் பிற பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கான சட்ட வாய்ப்புகள் உள்ளன.மேலும், அதிகார துஷ்பிரயோகம், சட்டவிரோத ஆதாயம், ஆவண முறைகேடுகள், பொது நம்பிக்கை மீறல், கூட்டுச் சதி மற்றும் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் உள்ளிட்ட கோணங்களிலும் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள அதிகாரம் பெற்றுள்ளனர் என்று சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.இதற்காக சம்பந்தப்பட்ட பதிவு ஆவணங்கள், சொத்து விவரங்கள், வங்கி பரிவர்த்தனைகள், அலுவலக பதிவேடுகள், கணினி தரவுகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து, குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்தாக வலுத்து வருகிறது.அரசு நிர்வாகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்தும் வகையில், திருப்பத்தூர் இணைபதிவாளர் அலுவலகம்-2 தொடர்பாக எழுந்துள்ள புகார்கள் மற்றும் சர்ச்சைகள் குறித்து லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் பாரபட்சமற்ற, வெளிப்படையான மற்றும் விரிவான விசாரணையை மேற்கொண்டு உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.இருப்பினும், விசாரணை அமைப்புகள் அல்லது நீதிமன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்படும் வரை, குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் குற்றமற்றவர் என்ற அடிப்படை சட்டக் கொள்கை நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் அமைச்சர் N. ஆனந்த் எம் எல் ஏ அவர்கள் வீடு இல்லாதவருக்கு வீட்டுமனை பட்டா வழங்கினார்.

*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்* அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று (16.06.2026) செவ்வாய்க்கிழமை,*மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் MLA* அவர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் சட்டமன்றத் தொகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கல் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.!இவ்விழாவில், *திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப அவர்கள் தலைமை வகிக்க, போளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.R.அபிஷேக் அவர்கள் முன்னிலை வகித்தார்.**நலத்திட்ட உதவிகள்**வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக 584 வீட்டுமனை பட்டா, 102 உட்பிரிவு பட்டா மாறுதல், 18 பட்டா மாறுதல், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பாக 4 பேருக்கு சக்கர நாற்காலி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு திட்டம் சார்பாக 703 புதிய குடும்ப அட்டை, கைத்தறி துறை சார்பாக 20 பேருக்கு தறி மற்றும் தறி உபகரணங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக 10 பேருக்கு இலவச தையல் இயந்திரம் ஆகிய நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.*மேலும் *வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் திட்டம் மற்றும் TNRTP, தாட்கோ, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை ஆகியவற்றின் கீழ் என மொத்தமாக 3836 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன… கலசப்பாக்கம் செய்தியாளர் M. வெங்கடேசன்