🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம். இன்றும் தொடரும் 7 ஆம் நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே 10 முத்தூர் …

நாவக்குறிச்சி ஏரியில் சட்டவிரோத மண் கொள்ளையா?மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள நாவக்குறிச்சி கிராம ஏரியில் வண்டல் மண் …

கோவை : கோவை அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் அந்தக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான செ.ம. வேலுசாமி,“அதிமுக ஆலமரம் போன்றது. தமிழகத்தை …

போளூர் வடக்கு ஒன்றியம் சார்பாக பொதுச் செயலாளர் புஷி ஆனந்த் அவர்கள் பிறந்தநாள் முன்னிட்டு படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் திருக்கோவில் சிறப்பு பூஜையும் மற்றும் அன்னதானம் நடைபெற்றது போளூர் வடக்கு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக விளையாட்டுத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ அர்ஜுனா அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் செங்கம் …

முக்கிய செய்தி

  • Home /
  • Uncategorized /
  • S.P.வேலுமணியால் நடந்த சதி.. மேடையில் கண்ணீர் விட்டு அழுத கோவை அதிமுக மாவட்ட செயலாளர். செ.ம .வேலுச்சாமி :

S.P.வேலுமணியால் நடந்த சதி.. மேடையில் கண்ணீர் விட்டு அழுத கோவை அதிமுக மாவட்ட செயலாளர். செ.ம .வேலுச்சாமி :

கோவை : கோவை அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் அந்தக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான செ.ம. வேலுசாமி,
“அதிமுக ஆலமரம் போன்றது. தமிழகத்தை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி. தூய சக்தி என கூறி தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. தற்போது அந்த கட்சியின் பெண் வழக்கறிஞர் ஒருவரே, தமிழகம் முழுவதும் பணம் பெற்று கொண்டு அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டதாக வழக்கு தொடர்ந்துள்ளார்.கட்சி தொடங்கியதில் இருந்தே நான் பதவியுடன் இருந்தேன். கடந்த 13 வருட காலமாக கட்சியில் பதவியின்றி பல்வேறு அவமானங்களை சந்தித்தேன். பல கட்சிகளில் இருந்து எனக்கு அமைச்சர், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பதவிகளை தர முன்வந்தனர். பணம் கொடுத்தும் என்னை அழைத்தனர். நான் எந்த கட்சிக்கும் செல்லவில்லை. எங்கோ இருந்த என்னை சட்டமன்றத்திற்கு அனுப்பி அமைச்சராக்கியதும், பிறகு மேயராக்கியதும் இந்த கட்சி தான். எனக்கு அவமானம் ஏற்படும்போது வேறு எங்காவது சென்று விடலாமா என்று யோசித்துள்ளேன் என்றும் கண்ணீர் மல்க பேசினார்.