திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேருந்து நிலையம் அருகே அண்ணாமலை ips இயக்கத்தின் ஆதரவாளர்கள் புதிய நிர்வாகிகளை இயக்கத்தில் இணைத்தனர்

அண்ணாமலை IPS அவர்கள் பாஜகவில் இருந்து வெளியேறி புதிய கட்சியினை உருவாக்கும் நோக்கத்தில் மாறுவோம் மாற்றுவோம் என்ற கொள்கையின் மூலம் தமிழ்நாடு முழுவதும் புதிய நிர்வாகிகளை சேர்க்கும் பணி அங்கெங்கே நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேருந்து நிலையம் அருகே அண்ணாமலை அவர்களின் ஆதரவாளர்கள் பந்தல் அமைத்து புதிய நிர்வாகிகளை இயக்கத்தில் இணைத்தனர். மாவட்ட செய்தியாளர் P. பிரபு
மோட்டார் வாகன ஆய்வாளர், விஏஓ உட்பட லஞ்சம் வாங்கிய 7 அதிகாரிகள் கைது
தமிழ்நாடு : தமிழகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர், இளநிலை பொறியாளர், கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) உட்பட 7 பேரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த ஒரு வாரமாக தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சி மண்டலம்-3 இளநிலை பொறியாளர் சுப்பிரமணியன், வடிகால் பணிக்கு அளவீட்டுப் பதிவேடு தயாரிப்பது மற்றும் ஏற்கனவே முடிக்கப்பட்ட சாலைப் பணிகளுக்காக ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் கணக்கில் வராத ரூ.13 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.தூத்துக்குடி மாவட்டம் கீழதிருச்செந்தூர் கிராம நிர்வாக அலுவலர் சரவணன் (ரூ.10 ஆயிரம்), தேனி கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் (ரூ.5 ஆயிரம்), திண்டுக்கல் பிர்கா சர்வேயர்கள் முகமது இப்ராகிம் (ரூ.5 ஆயிரம்), மீனாம்பிகை (ரூ.10 ஆயிரம்) பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் பெற்றபோது பிடிபட்டனர். அதேபோல, திருவள்ளூர் மாவட்டத்தில் 215 நெல் மூட்டைகளுக்கான கட்டணப் பட்டியலை அனுப்ப, ஒரு மூட்டைக்கு ரூ.50 வீதம் ரூ.10,750 லஞ்சம் பெற்ற கட்டணப் பட்டியல் வசூலிப்பாளர் சவுந்தர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் லாரிக்கு தகுதிச் சான்றிதழ் புதுப்பித்துதர ரூ.5,800 லஞ்சம் கேட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முக ஆனந்த் மற்றும் அவருடன் இருந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டனர்.பழைய ஊழல் வழக்குகளை விசாரித்த மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றங்கள் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனைகளை வழங்கியுள்ளன. விருத்தாசலம் தாலுகா அலுவலக சர்வேயர் அண்ணாதுரை, கிராம உதவியாளர் கண்ணன் ஆகியோருக்கு லஞ்ச வழக்கில் 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், மொத்தம் ரூ.10,000 அபராதமும் விதித்து கடலூர் நீதிமன்றம் கடந்த 5-ம் தேதி தீர்ப்பளித்தது. மாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக ஊரக நல அலுவலர் இந்திராணிக்கு லஞ்ச வழக்கில் 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.4,000 அபராதமும் விதித்து கிருஷ்ணகிரி நீதிமன்றம் கடந்த 9-ம் தேதி தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை மாவட்டம் காரப்பட்டு கிராமத்தில் இறந்தவர் உடலை புதைப்பதில் பிரச்சனை.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், கலசப்பாக்கம் தொகுதி, புதுப்பாளையம் ஒன்றியம் காரப்பட்டு பகுதியில் ஜோகி செட்டி இன மக்கள் தலைமுறைகளாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டு நிலத்துக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இன்று அப்பகுதியைச் சேர்ந்த முதியவர் சுப்பராயன் காலமானார். உடலை அந்த சுடுகாட்டில் அடக்கம் செய்ய முற்பட்டபோது பட்டா பெற்ற தனியார் தரப்பினர் தடுத்து நிறுத்தினர்.இதையடுத்து தமிழக வெற்றிக் கழக நிருவாகிகள் வட்டாட்சியரிடம் போராட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் ஜி.கே.கதிரவன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜேஷ், மாவட்ட ஊடகப் பிரிவு அமைப்பாளர் வெங்கடேஷ், மாவட்ட வணிகர் சங்க அமைப்பாளர் பாண்டித்துரை ஆனந்த் மாவட்ட செயற்குழு உறுப்பினர் MR ஆனந்த் ஒன்றிய நிர்வாகி புவனேஷ்ஒன்றிய இளைஞரணிகுருபாலன்ஒன்றிய மாணவரணி அமைப்பாளர்மற்றும் காரப்பட்டு த.வெ.க நிருவாகிகள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின், முதியவரின் உடல் காலங்காலமாக புதைக்கப்பட்ட அதே சுடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. M.வெங்கடேசன் கலசப்பாக்கம் செய்தியாளர்
கோவையில் கைதியை தப்பிக்க வைக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவலர் கைது. கவன குறைவாக செயல்பட்ட 3 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை, கோவை அரசு மருத்துவமனையில் சிறை கைதிகள் சிகிச்சைக்காக தங்கி இருந்த வார்டில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு பிம்முடு அஜித்குமார் என்ற விசாரணை கைதி தப்பி ஓடினார். அவர் ஆன்லைன் தளங்களில் கார் விற்பனை என்ற பெயரில் பல்வேறு நபர்களிடம் மோசடியில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார்.அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லப்பட்டதால் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில், சிறை கைதிகளை தங்க வைத்திருக்கக்கூடிய வார்டில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், காவலர்களின் கண்காணிப்பை மீறி தப்பியோடினார். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், கைது அஜித்குமார் தப்பியோட காவலர் ஒருவரின் உதவியை பயன்படுத்தியுள்ளார் என்பது தெரியவந்தது. அவரை தப்பிக்க வைக்க ஷேக் முகமது ரோஷன் என்ற காவலர் வந்து உதவியதும், இதற்காக அவர் ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்றதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து காவலர் ஷேக் முகமது ரோஷனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதே சமயம், அவருடன் பணியில இருந்த 3 காவலர்கள், கவனக்குறைவாக செயல்பட்ட காரணத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தப்பியோடிய கைதி அஜித்குமாரை வந்து 5 மணி நேரத்தில் சேலம் மேச்சேரி பகுதியில் தனிப்படை போலீசார் கைது செய்து மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார்.

திருவண்ணாமலை to காஞ்சி சாலையில் விஸ்வநாதபுரம் கூட்டு சாலை அருகே குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தில் மோதாமல் தவிர்ப்பதற்கு எதிர்ப்புறம் திரும்பிய கார் நிலை தடுமாறி சாலை விபத்தில் சிக்கியது அதிர்ஷ்டவசமாக காரில் பயணம் செய்தவர்களுக்கு லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள் கார் முன்பக்கம் முழுவதும் சேதம் அடைந்து விட்டது M. வெங்கடேசன் கலசப்பாக்கம் செய்தியாளர்
வீடு புகுந்து 50 பவுன் தங்க நகை கொள்ளை.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா சுண்டக்காபாளையம் கிராமத்தில் பூட்டி வைத்திருந்த கதவை உடைத்து 50 பவுன் தங்க நகை கொள்ளை அடித்த மர்ம நபர்கள். ரமேஷ் s/o சம்பத் இவர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவில் உள்ள பெண்ணாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் இவர் பெங்களூர் வாழக்காய் மண்டியில் வேலை பார்த்து வருகின்றார். கடந்த ஆறு மாதத்துக்கு முன் சுண்டகாபாளையம் கிராமத்தில் உள்ள ஒரு மாடி வீட்டை விலைக்கு வாங்கியுள்ளார். இவர் தன் சொந்த ஊரான பெண்ணாத்தூரில் உள்ள வீட்டை புதுப்பிப்பதற்காக அங்குள்ள வீட்டு சாமான்களை சுண்டக்காபாளையம் புதிய வீட்டிற்கு மாற்றி அங்கு தனது குடும்பத்தாருடன் வாழ்ந்து வந்திருக்கிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சொந்த ஊரான பெண்ணாத்தூர் திருவிழாவிற்கு சென்றிருக்கிறார். இவர்கள் சென்ற விஷயம் தெரிந்த யாரோ மர்ம நபர் இவர் வீட்டில் உள்ள முன் கதிவின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் சென்று அங்கு பீரோவை உடைத்து 50 சவரன் தங்க நகையும் 10,000 ஆயிரம் ரொக்க பணமும் திருடி சென்றதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த செங்கம் காவல்துறையினர் விரைந்து திருடு போன வீட்டை மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணரை வரவைத்து சோதனை செய்துள்ளனர். மற்றும் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்திய வருகின்றனர். மாவட்ட செய்தியாளர் P. பிரபு
சேலம் மாவட்டம் ஏறி ஆக்கிரமிப்புகளை வட்டார வளர்ச்சி அதிகாரி அகற்றினார்.

நாவக்குறிச்சி ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றம்சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள நாவக்குறிச்சி ஏரியில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் தனபால் முன்னிலையில் நடைபெற்றது.நீர்நிலைகளை பாதுகாக்கும் நோக்கில் வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் ஏரிப் பகுதியில் சட்டவிரோதமாக செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அவற்றை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாத வகையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.நீர்நிலைகளின் பரப்பளவை பாதுகாத்து, மழைநீர் சேமிப்பு திறனை மேம்படுத்தும் வகையில் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்யாமல் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்
எம் பி சிவலிங்கம் அவர்களுக்கு நிர்வாகிகள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

எஸ்.ஆர். சிவலிங்கம் எம்.பி.க்கு பிறந்தநாள் வாழ்த்து குவிந்ததுதி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துசேலம், ஜூன் 10–சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான எஸ்.ஆர். சிவலிங்கம் எம்.பி. இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.இதையொட்டி தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அவரை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மேலும், சமூக வலைதளங்களிலும் ஏராளமானோர் வாழ்த்து பதிவுகளை வெளியிட்டு தங்களது அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தினர்.பிறந்தநாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைவாசல் மத்திய ஒன்றிய கழக செயலாளர் சாத்தப்பாடி மணி (எ) க. பழனிசாமி, முன்னாள் ஒன்றிய கழக பொறுப்பாளர் வரகூர் செ. செயபாலன், மாவட்ட பிரதிநிதி மு. தேவேந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் சித்தேரி ப. கண்ணுசாமி, காமக்காபாளையம் கிளை கழக செயலாளர் அ. செல்லையா, மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் நாவக்குறிச்சி மேலமலை, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளரும் நாவலூர் கிளை கழக செயலாளருமான கூ. கருப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.கழக வளர்ச்சிக்கும், மக்கள் நலப் பணிகளுக்கும் தொடர்ந்து பாடுபட்டு வரும் எஸ்.ஆர். சிவலிங்கம் எம்.பி. அவர்கள் நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல்நலத்துடனும் மக்கள் சேவையில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.பிறந்தநாளையொட்டி பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்
திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு கீழ்பெண்ணாத்தூரில் தமிழ்நாடு வெற்றி கழகம் அலுவலகம் திறப்பு விழா.

தமிழக வெற்றிக் கழகம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களின் ஆணையின்படிகழக பொதுச் செயலாளர்மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு N ஆனந்த்அவர்களின் நல்வழியில் திருவண்ணாமலை மேற்கு மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் நகரம் அலுவலகம் திறப்பு விழா!!!!தலைமை & அலுவலக திறப்பு திரு GK கதிரவன் மாவட்ட கழக செயலாளர் உடன் திரு ஆட்டோ நடராஜன் கீழ்பெண்ணாத்தூர் நகர செயலாளர் திரு ஜேசுதாஸ் கீழ்பெண்ணாத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய கழக நிர்வாகிகள்!!!கலந்துகொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்….நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ரிப்பன் வெட்டி அலுவலகத்தை தெரிந்து வைத்து கழக நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்க வெங்கடேஷ் க்ரைம் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் கலசப்பாக்கம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் டீ கடையில் பூட்டை உடைத்து ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள பணம் பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்கள் ;
பொள்ளாச்சி வால்பாறை மெயின் ரோடு ஆவல்சினம்பாளையம் சுப்பிரமணியம் அவர்களின் மகன் நந்தகுமார் என்பவர் பொள்ளாச்சி கோவை மெயின்ரோட்டில் உள்ள சிடிசி டிப்போ பின்புறம் கடந்த நான்கு வருடமாக டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு டீக்கடை பூட்டிச் சென்ற நிலையில் காலையில் பார்த்த பொழுது கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.இது குறித்து பொள்ளாச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக பொள்ளாச்சி கோவை மெயின் ரோடு சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமாக திருட்டுகள் நடைபெற்று வருகிறது. இதனை போலீசார் கண்காணிக்க வேண்டும் என கடையின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.