🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

30/04/26சிறுவாச்சூர் அருகே அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் – பக்தர்கள் திரள், பிரம்மாண்ட அன்னதானம்!சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே அமைந்துள்ள சிறுவாச்சூர் திருவள்ளுவர் நகர் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகா …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்திலிருந்து போளூர் செல்லும் கனரக வாகனங்கள் பஜார் வழியே செல்வதினால் பாமர மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படுகின்றன. அந்த சாலை குறுகிய சாலையாக உள்ளதால் இரு …

சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் கொளத்தூர் ஒன்றியம் காவேரிபுரம் ஊராட்சிக்கு சொந்தமான குத்தேரிகள்காடு சின்னத்தம்பி என்பவரின் பட்டிக்குள் புகுந்து 6 ஆட்டுக்குட்டிகளை சிறுத்தை கடித்து கொன்றது இது சம்பந்தமாக வனத்துறை …

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பட்டுத்துறை ரோட்டில் அமைந்துள்ளஅருள்மிகு விநாயகர் சமயபுரத்து மாரியம்மன் திருக்கோவில் 38ஆம் ஆண்டு தேர் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பக்தர்கள் பலர் கலந்து …

நீதிமன்றம் ஆயில் தண்டனை வழங்கியது பணியை இழந்த நியாயமான காவல்துறை அதிகாரி தற்போது செய்ய வேண்டியவை இதுவே…1. அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாப்பு (Article 311)அரசு ஊழியர் ஒருவர் “டிஸ்மிஸ்” (Dismissal) …

முக்கிய செய்தி

சேலம் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்தது

20/04/26சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் சூடு அதிகரித்துள்ளது. நல்லதம்பி அவர்களுக்கு ஆதரவாக, பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் மற்றும் தேர்தல் பொறுப்பாளர் மணிகண்டன் தலைமையில் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.இந்த பிரச்சாரத்தில் பாஜக ஒன்றிய தலைவர் GMS முருகன், ஒன்றிய துணைத் தலைவர் பச்சமுத்து, ஒன்றிய செயலாளர் அஜித் குமார், ஐடி விங் பொறுப்பாளர் வேலாயுதம் அங்கமுத்து கோபிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், மணிகண்டன் அவர்கள் மாநில செயற்குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார்.பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பெண்களிடையே இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு கோரி நோட்டீஸ்கள் வழங்கப்பட்டு, வாக்குகள் சேகரிக்கப்பட்டன. தேர்தல் பரப்புரை தீவிரமடைந்த நிலையில், கெங்கவல்லி தொகுதியில் அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ளது.சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு

19/04/26 சேலம் மாவட்டம் கெங்கவல்லி தொகுதியில் அ. நல்லதம்பி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சிறுவாச்சூர் கிராமத்தில் பகுதிகளில் வீடு தோறும் சென்று ஆதரவு கோரிய அவர், ₹10,000 நிதியுதவி, விவசாயக் கடன் தள்ளுபடி, வேலைவாய்ப்பு திட்டங்கள் போன்ற வாக்குறுதிகளை அறிவித்தார்இந்த நிகழ்வில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் ஆறு இளங்கோவன் ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி, சேலம் புறநகர் மாவட்டம் பொருளாளர் ஜெகதீசன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி பெரியசாமி முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கந்தசாமி மேலும் பாரதீய ஜனதா கட்சி முன்னாள்மாவட்டத் தலைவர் மணிகண்டன்ஒன்றிய தலைவர் ஜி.எம். முருகன் வேலாயுதம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி ஜெயப்பிரகாஷ் ஒன்றிய தலைவர் ராமசாமி, பொன்னுசாமி மற்றும் குள்ளு மூப்பர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பிரச்சாரத்தை உற்சாகமாக முன்னெடுத்தனர். சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்

கோவையில் இருமுனை போட்டி வெல்ல போவது?

கோவையில் பத்துக்குப் பத்து வெல்வது யார்? – இறுதிக்கட்ட போரில் செந்தில் பாலாஜி, வேலுமணி! சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை நெருங்கி யிருக்கும் நிலையில், `கோவை தங்களது கோட்டை’ என நிரூபிக்க செந்தில் பாலாஜி தலைமையிலான தி.மு.க-வும், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அ.தி.மு.க-வும் இங்கு சம பலத்துடன் மோதிக் கொள்வதால், தேர்தல் களம் அனல் பறக்கிறது. கடந்த தேர்தலில் கோவையில் ஏற்பட்ட படுதோல்விக்கு பதிலடி தர வேண்டும் என செந்தில் பாலாஜியை கோவை தெற்குத் தொகுதியில் தி.மு.க. தலைமை களமிறக்கியிருக்கிறது. கோவையில் பத்துக்குப் பத்து வெல்ல வேண்டுமென்ற தலைமையின் கட்டளையை நிறைவேற்றிக் காட்ட வேண்டும் என செந்தில் பாலாஜியும், அதைத் தடுத்து தனது ‘பவரை’ மீண்டும் காட்ட வேண்டும் என எஸ்.பி.வேலுமணியும் தேர்தல் பணிகளை மேற்கொண்டிருக் கின்றனர். செந்தில் பாலாஜி அமைத்திருக்கும் இறுதிக்கட்ட தேர்தல் வியூகம் குறித்து மாவட்ட தி.மு.க நிர்வாகிகளிடம் பேசினோம். “கடந்த சட்டமன்றத் தேர்தலில் 10 ஆண்டுகள் எதிர்க் கட்சியாக இருந்ததால், போதிய பலம் இல்லாமல் தேர்தலைச் சந்தித்தோம். இருப்பினும், சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில்தான் கோவையில் பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இந்த முறை தி.மு.க ஆட்சியின் திட்டங்கள், சாதனைகளால் பலமான கட்சியாகவும், வலுவான கூட்டணியோடும் தேர்தலை எதிர்கொள்கிறோம்.

டிரைவரின் அலட்சியத்தால் 9 உயிர் பறிபோனது

9 ஆசிரியர்களின் கனவுகளை பறித்த டிரைவரின் அலட்சியம்.. வால்பாறை மக்கள் சொல்வது என்ன? வால்பாறை: வால்பாறை செல்லும் சாலையில் உள்ள 13 வது கொண்டை ஊசி வளைவு மிகவும் குறுகலான வளைவுகளில் ஒன்று. இந்த வளைவு திரும்பும் இடத்தில் தடுப்பு சுவரை தாண்டி தவறி விழுந்தால் நேராக 9 வது வளைவில் தான் விழுவோம். களப்பணியின் போது நாங்கள் இதன் வழியே 13 வது வளைவில் இருந்து கீழே நேரடியாக 9 வது வளைவு வரை சென்று இருக்கிறோம் என்று பொதுமக்கள் வால்பாறை சம்பவம் குறித்து விவரிக்கிறார்கள். டிரைவரின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவே இதற்கு காரணம் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

செங்கம் சிவன் கோவில் அருகே போதை ஆசாமிகள் அட்டூழியம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகராட்சியில் அமைந்துள்ள சிவன் கோவில் முன்பு மாமிசக் கவர்களும் மது பாட்டில்களும் கொட்டிக் கிடக்கின்றன. இதனை கோவில் அறநிலைத்துறையும் நகராட்சியும் கண்டு கொள்ளாத நிலையில் உள்ளது பொதுமக்கள் கோவிலுக்கு அமைதியும் சந்தோஷத்தையும் தேடி தான் வருகின்றார்கள். ஆனால் இங்கு மது பிரியர்கள் மதுவை அருந்திவிட்டு பாட்டில்களை சிவன் கோவில் முன்னே உடைத்து விட்டு செல்கின்றார்கள். இதனால் கோவிலுக்கு வரும் பொதுமக்கள் குழந்தைகள் கால்களில் காயத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இதனை அறநிலைத்துறையோ கோவில் நிர்வாகமோ மற்றும் நகராட்சி அதிகாரிகளோ கண்டு கொள்வதாக தெரியவில்லை. இந்த நிலை நீடித்தால் சிவன் கோவில் மது அருந்தும் கூடமாக மாறிவிடும் என்ற அபாயம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்வார்களா என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றார்கள். மாவட்ட செய்தியாளர் P. பிரபு

திருவண்ணாமலையில் பாஜகவுக்கு வாக்கு சேகரிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையம் அருகே இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் சம்பத்ராஜ் அவர்கள் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சி. ஏழுமலை அவர்களை ஆதரித்து தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென்று மக்களிடையே உரையாற்றினார். மாவட்ட செய்தியாளர் P. பிரபு

தலைவாசல் பகுதியில் இரட்டை இலைக்காக வாக்குகள் சேகரிப்பு

17.04.2026 – சேலம் மாவட்டம் கெங்கவல்லி தொகுதியில் அதிமுக வேட்பாளர் அ. நல்லதம்பி தீவிர வாக்கு சேகரிப்பு!சேலம் மாவட்டம், தலைவாசல் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட நாவக்குறிச்சி தலைவாசல் நத்த கரை உள்ளிட்ட பகுதிகளில் கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளர் அ. நல்லதம்பி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.பிரச்சாரத்தின் போது மக்களுக்கு பல முக்கிய வாக்குறுதிகளை அறிவித்தார்:ரேஷன் கார்டு அடிப்படையில் ₹10,000 நிதியுதவிவிவசாயக் கடன் தள்ளுபடிபுதிய வேலைவாய்ப்பு திட்டங்கள்கால்நடை பூங்காவில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கம்இந்த பிரச்சாரம் ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி, எம்ஜிஆர் மன்ற ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன், அன்பழகன், அய்யாவு, ராஜேந்திரன், என்.கே. முத்துசாமி, வார்டு உறுப்பினர் ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு, முன்னாள் கவுன்சிலர் சின்னதுரை, மகளிர் அணி நிர்வாகிகள் ராதா, பானுமதி, பாஜக ஒன்றிய தலைவர் ஜி.எம். முருகன், பாமக ஒன்றிய தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உற்சாகமாக நடைபெற்றது. சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்

சேலம் கெங்கவல்லி மலைப்பகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு.

18/04/26சேலம் மாவட்டம் கெங்கவல்லி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பச்சமலை மலைப்பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்று வருகிறது. கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு அ. நல்லதம்பி அவர்கள், பச்சமலை மலைப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் வீடு வீடாக சென்று மக்களிடம் சந்தித்து, இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.மேலும், மக்களுடன் இணைந்து நடனம் ஆடி உற்சாகத்தை ஏற்படுத்திய அவர், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த நிகழ்ச்சியில் கெங்கவல்லி மேற்கு ஒன்றிய செயலாளர் திரு துரை ரமேஷ் அவர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பல பொதுமக்கள் கலந்து கொண்டு உற்சாகமாக ஆதரவு தெரிவித்தனர்.இந்த பிரச்சாரம் மலைப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்

திருவண்ணாமலை J. P. நட்டா வருகை

திருவண்ணாமலைக்கு j. P. நட்டா அவர்கள் 14/04/2026 அன்று தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகை தந்தார். அவர் திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சி. ஏழுமலையை ஆதரித்து சிறப்புரையாற்றினார். அதில் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு கொடுத்த முக்கிய திட்டங்களையும் மோடி அரசு சாதனைகளையும் மக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார். பின்பு C. ஏழுமலை அவர்கள் மக்களிடையே வாக்குகளை சேகரித்தார். உடன் மாவட்டத் தலைவர் ரமேஷ்.T. S. சங்கர். மற்றும் என் டி ஏ கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.