🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா சுண்டக்காபாளையம் கிராமத்தில் பூட்டி வைத்திருந்த கதவை உடைத்து 50 பவுன் தங்க நகை கொள்ளை அடித்த மர்ம நபர்கள். ரமேஷ் s/o சம்பத் இவர் …

நாவக்குறிச்சி ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றம்சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள நாவக்குறிச்சி ஏரியில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் தனபால் முன்னிலையில் நடைபெற்றது.நீர்நிலைகளை பாதுகாக்கும் நோக்கில் …

எஸ்.ஆர். சிவலிங்கம் எம்.பி.க்கு பிறந்தநாள் வாழ்த்து குவிந்ததுதி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துசேலம், ஜூன் 10–சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான எஸ்.ஆர். சிவலிங்கம் எம்.பி. …

தமிழக வெற்றிக் கழகம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களின் ஆணையின்படிகழக பொதுச் செயலாளர்மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு N ஆனந்த்அவர்களின் நல்வழியில் திருவண்ணாமலை மேற்கு மாவட்டம் …

பொள்ளாச்சி வால்பாறை மெயின் ரோடு ஆவல்சினம்பாளையம் சுப்பிரமணியம் அவர்களின் மகன் நந்தகுமார் என்பவர் பொள்ளாச்சி கோவை மெயின்ரோட்டில் உள்ள சிடிசி டிப்போ பின்புறம் கடந்த நான்கு வருடமாக டீக்கடை நடத்தி …

முக்கிய செய்தி

  • Home /
  • DISTRICT /
  • வீடு புகுந்து 50 பவுன் தங்க நகை கொள்ளை.

வீடு புகுந்து 50 பவுன் தங்க நகை கொள்ளை.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா சுண்டக்காபாளையம் கிராமத்தில் பூட்டி வைத்திருந்த கதவை உடைத்து 50 பவுன் தங்க நகை கொள்ளை அடித்த மர்ம நபர்கள். ரமேஷ் s/o சம்பத் இவர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவில் உள்ள பெண்ணாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் இவர் பெங்களூர் வாழக்காய் மண்டியில் வேலை பார்த்து வருகின்றார். கடந்த ஆறு மாதத்துக்கு முன் சுண்டகாபாளையம் கிராமத்தில் உள்ள ஒரு மாடி வீட்டை விலைக்கு வாங்கியுள்ளார். இவர் தன் சொந்த ஊரான பெண்ணாத்தூரில் உள்ள வீட்டை புதுப்பிப்பதற்காக அங்குள்ள வீட்டு சாமான்களை சுண்டக்காபாளையம் புதிய வீட்டிற்கு மாற்றி அங்கு தனது குடும்பத்தாருடன் வாழ்ந்து வந்திருக்கிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சொந்த ஊரான பெண்ணாத்தூர் திருவிழாவிற்கு சென்றிருக்கிறார். இவர்கள் சென்ற விஷயம் தெரிந்த யாரோ மர்ம நபர் இவர் வீட்டில் உள்ள முன் கதிவின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் சென்று அங்கு பீரோவை உடைத்து 50 சவரன் தங்க நகையும் 10,000 ஆயிரம் ரொக்க பணமும் திருடி சென்றதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த செங்கம் காவல்துறையினர் விரைந்து திருடு போன வீட்டை மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணரை வரவைத்து சோதனை செய்துள்ளனர். மற்றும் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்திய வருகின்றனர்.

மாவட்ட செய்தியாளர் P. பிரபு