🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்* அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று (16.06.2026) செவ்வாய்க்கிழமை,*மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் MLA* அவர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் …

அண்ணாமலை IPS அவர்கள் பாஜகவில் இருந்து வெளியேறி புதிய கட்சியினை உருவாக்கும் நோக்கத்தில் மாறுவோம் மாற்றுவோம் என்ற கொள்கையின் மூலம் தமிழ்நாடு முழுவதும் புதிய நிர்வாகிகளை சேர்க்கும் பணி அங்கெங்கே …

தமிழ்நாடு : தமிழகத்​தில் மோட்​டார் வாகன ஆய்​வாளர், இளநிலை பொறி​யாளர், கிராம நிர்​வாக அலு​வலர் (விஏஓ) உட்பட 7 பேரை லஞ்ச ஒழிப்​புத் துறை​யினர் கைது செய்​துள்​ளனர். தமிழகத்​தின் பல்​வேறு …

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், கலசப்பாக்கம் தொகுதி, புதுப்பாளையம் ஒன்றியம் காரப்பட்டு பகுதியில் ஜோகி செட்டி இன மக்கள் தலைமுறைகளாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டு நிலத்துக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதால் …

கோவை, கோவை அரசு மருத்துவமனையில் சிறை கைதிகள் சிகிச்சைக்காக தங்கி இருந்த வார்டில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு பிம்முடு அஜித்குமார் என்ற விசாரணை கைதி தப்பி ஓடினார். அவர் ஆன்லைன் …

முக்கிய செய்தி

  • Home /
  • Uncategorized /
  • கோவையில் கைதியை தப்பிக்க வைக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவலர் கைது. கவன குறைவாக செயல்பட்ட 3 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கோவையில் கைதியை தப்பிக்க வைக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவலர் கைது. கவன குறைவாக செயல்பட்ட 3 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை,

கோவை அரசு மருத்துவமனையில் சிறை கைதிகள் சிகிச்சைக்காக தங்கி இருந்த வார்டில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு பிம்முடு அஜித்குமார் என்ற விசாரணை கைதி தப்பி ஓடினார். அவர் ஆன்லைன் தளங்களில் கார் விற்பனை என்ற பெயரில் பல்வேறு நபர்களிடம் மோசடியில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார்.அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லப்பட்டதால் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில், சிறை கைதிகளை தங்க வைத்திருக்கக்கூடிய வார்டில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், காவலர்களின் கண்காணிப்பை மீறி தப்பியோடினார். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், கைது அஜித்குமார் தப்பியோட காவலர் ஒருவரின் உதவியை பயன்படுத்தியுள்ளார் என்பது தெரியவந்தது. அவரை தப்பிக்க வைக்க ஷேக் முகமது ரோஷன் என்ற காவலர் வந்து உதவியதும், இதற்காக அவர் ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்றதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து காவலர் ஷேக் முகமது ரோஷனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதே சமயம், அவருடன் பணியில இருந்த 3 காவலர்கள், கவனக்குறைவாக செயல்பட்ட காரணத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தப்பியோடிய கைதி அஜித்குமாரை வந்து 5 மணி நேரத்தில் சேலம் மேச்சேரி பகுதியில் தனிப்படை போலீசார் கைது செய்து மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.