நாவக்குறிச்சி ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றம்சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள நாவக்குறிச்சி ஏரியில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் தனபால் முன்னிலையில் நடைபெற்றது.நீர்நிலைகளை பாதுகாக்கும் நோக்கில் வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் ஏரிப் பகுதியில் சட்டவிரோதமாக செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அவற்றை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாத வகையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.நீர்நிலைகளின் பரப்பளவை பாதுகாத்து, மழைநீர் சேமிப்பு திறனை மேம்படுத்தும் வகையில் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்யாமல் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா சுண்டக்காபாளையம் கிராமத்தில் பூட்டி வைத்திருந்த கதவை உடைத்து 50 பவுன் தங்க நகை கொள்ளை அடித்த மர்ம நபர்கள். ரமேஷ் s/o சம்பத் இவர் …