அண்ணாமலையுடன் சென்றவர்கள் சுயநலவாதிகள் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
அண்ணாமலைக்கு வாழ்த்தும் கிடையாது, ஆதரவும் கிடையாது. அண்ணாமலை வந்ததால் பா.ஜ.க பலமடையவும் இல்லை; அவர் வெளியே சென்றதால் பலவீனம் அடையவும் இல்லை. அண்ணாமலையுடன் சென்றவர்கள் சுயநலவாதிகள். பொதுநலவாதிகள் பா.ஜ.க.விலேயே தொடருகின்றனர். தாமரையில் இருந்து ஒரு இதழை கூட யாராலையும் அசைக்க முடியாது.கட்சியை விட்டுச் சென்றவர்களுக்கு ஆதரவும் கிடையாது; வாழ்த்தும் கிடையாது. புதிய இயக்கத்தில் லட்சம் பேர் இணைகிறார்கள் என்பது எங்களுக்கு பொருட்டல்ல; லட்சியவாதிகள் எங்களுடன் இருக்கின்றனர். வேறு முகத்தைக் காண்பித்து பா.ஜ.கவுக்கு மாற்று சக்தியைத் தேட வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பத்திரிகையாளர்களை மிரட்டினாரா செங்கோட்டையன்.. முற்றிய வாக்குவாதம்.. ப்ரஸ்மீட்டில் பரபரப்பு
கோவை: தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அறிவிக்கப்பட்ட திட்டங்களை விட அறிவிக்கப்படாத சர்ச்சைகள் தான் ஏராளமான உள்ளன. முதலமைச்சர் விஜயும், அமைச்சர்களும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். ஆய்வு என்கிற பெயரில் ரீல்ஸ் மோகத்துடன் வலம் வருவது, சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறுவது நடந்து வருகிறது. அந்த வரிசையில் மூத்த அமைச்சர் செங்கோட்டையனும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சட்டம் ஒழுங்கு பாதிப்பு குறித்த கேள்விக்கு உரிய பதில் அளிக்காமல் செங்கோட்டையன் பத்திரிகையாளர்களை மிரட்டும் தொனியில் பேசியதால், செய்தியாளர்கள் கோபமடைந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அனுமதியின்றி விளம்பரம்: கோவையில் தனியார் நிறுவனத்திற்கு அபராதம் விதித்து மாநகராட்சி அதிரடி எச்சரிக்கை!
கோவை : தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் மற்றும் புதிய விதிகள் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998 மற்றும் அதன் புதிய விதிகள், 2023-ன் படி, பொது இடங்களில் விளம்பரத் திரைகள் (Electronic display screens), விளம்பரப் பலகைகள் (Hoardings) அல்லது பேனர்களை வைக்க விரும்பும் தனிநபர்களோ அல்லது நிறுவனங்களோ குறைந்தது 15 நாட்களுக்கு முன்பே மாநகராட்சிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.இதற்கான உரிய கட்டணத்தைச் செலுத்தி, மாநகராட்சியிடம் இருந்து முறையான ஒப்புதல் கடிதத்தைப் பெற்ற பின்னரே விளம்பரங்களை வைக்க வேண்டும்.அனுமதியின்றி விளம்பரங்களை வெளியிடும் பட்சத்தில், விளம்பரம் கொடுத்த நிறுவனங்கள் மட்டுமன்றி, அந்த விளம்பரங்களை அச்சிட்ட அச்சகங்கள் (Printing Agencies) மீதும் கூட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.சிறைத்தண்டனை மற்றும் அபராத விபரங்கள் விதிமீறுபவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் சட்டம் 117-U பிரிவின் கீழ் வகுக்கப்பட்டுள்ளன:விளம்பரப் பலகைகள் (Hoardings):மாநகராட்சி அனுமதியின்றிப் பெரிய அளவிலான விளம்பரப் பலகைகள் அல்லது இரும்பு உள்கட்டமைப்புகளை நிறுவுபவர்களுக்கு3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைஅல்லது₹20,000 அபராதம், அல்லது இவ்விரண்டு தண்டனைகளும் சேர்த்து விதிக்கப்படலாம்.பிளெக்ஸ் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள்:தற்காலிக பிளெக்ஸ் பேனர்கள் மற்றும் சுவரொட்டிகளை ஒட்டுபவர்களுக்குஓராண்டு வரை சிறைத்தண்டனைஅல்லது₹5,000 வரை அபராதம், அல்லது இவை இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
பள்ளிக்கல்வித் துறையில் புதிய பதவிகள்: அரசாணை வெளியீடு
கல்வி : பள்ளிக்கல்வித் துறையில் புதிய பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக துறைசெயலர் ப.சந்தரமோகன் வெளியிட்ட அரசாணை: பள்ளிக்கல்வித் துறையின் அரசு தேர்வுத்துறையில் புரோகிராமர், தமிழ்நாடு பொது சார்நிலை பணியின்கீழ் கான்சோல் ஆபரேட்டர் மற்றும் மெஷின் சூப்பர்வைசர், தமிழ்நாடு கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பணியில் உடற்கல்வி பாடவிரிவுரையாளர் ஆகியபதவிகள் உருவாக்கப்படுகின்றன என கூறப்பட்டுள்ளது. விரைவில் அந்த பதவிகளுக்கு நேரடி நியமனம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடற்கல்வி விரிவுரையாளர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாகவும் புரோகிராமர்,கான்சோல் ஆபரேட்டர் மற்றும் மெஷின் சூப்பர்வைசர் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமாகவும் நிரப்பப்படும்.
பொறந்த குழந்தையோட போய் நின்னேன்; அவமானப்படுத்தி அனுப்புறாங்க!’ – தவெக எம்.எல்.ஏ!
“என்னுடைய கைக்குழந்தையோடு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். மேயர் பிரியாவும் வந்திருந்தார். மரியாதை நிமித்தமாக கூட அவர் வணக்கம் வைக்கவோ சிரிக்கவோ தயாராக இல்லை. நானும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.திரு.வி.க நகர் தொகுதிக்குட்பட்ட புளியந்தோப்பில் பள்ளிக்கட்டிடம் திறக்கும் விழா ஒன்றில், மேயர் பிரியாவால் தவெக எம்.எல்.ஏ பல்லவி புறக்கணிக்கப்படதாக குற்றம் சாட்டியுள்ளார்.
புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலை
புதிய இயக்கம் தொடங்கும் அறிவிப்பை நாளைய தினம் வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப் போவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.இதுகுறித்து அண்ணாமலை புதன்கிழமை கூறுகையில், சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) ஊடக சந்திப்பை நடத்தி எனது நிலைப்பாடு குறித்து விரிவாக விளக்கவுள்ளேன். முதல்கட்டமாக ஓா் இயக்கத்தைத் தொடங்குவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். ஒன்றரை ஆண்டுகள் அந்த இயக்கத்தை நடத்தி, நிா்வாகிகள், தொண்டா்களுக்கு அரசியல் பயிற்சியை அளித்துவிட்டு, அதன் பின்னா் புதிய அரசியல் கட்சியைத் தொடங்க முடிவு செய்துள்ளேன் என்றாா்.
முதல் அமைச்சரவைக் கூட்டம் :
முதல்வர் விஜய் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் ஜூன் 5, 2026 அன்று காலை 11:00 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது. தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும்.
சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்!
சட்டத் துறையின் செயலாளராக கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்த சி.ஜார்ஜ் அலெக்சாண்டர் அரசு பணியிலிருந்து மே 31 ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார்.அவரது ஓய்வைத் தொடர்ந்து, மாநில சட்ட ஆணையத்தின் முழுநேர உறுப்பினர் செயலாளராக பணியாற்றி வந்த ப. சுமதி, ஜூன் 2 ஆம் தேதி முதல் சட்டத் துறையின் செயலாளராக நீயமிக்கப்பட்டுள்ளார்.இந்நியமனத்தின்மூலம், சட்டத் துறையின் செயலாளர் பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையை ப. சுமதி பெறுகிறார். இது சட்டத் துறையின் வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்.
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு
சென்னை: கோடை விடுமுறை முடிந்து விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் பள்ளி கட்டண வசூலில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார், சிபிஎஸ்இ மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் வகுப்பு வாரியாக கட்டண விவரங்களை வெளிப்படையாக எழுதி நுழைவு வாயிலில் வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா..
தமிழ்நாடு: தமிழகத்தின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி. மோகனா, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 75 ஆண்டுகளில், உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றாமல், நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்த 11வது நபர் என்ற அரிய சாதனையை அவர் படைத்துள்ளார்.தமிழ்நாட்டில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகியுள்ள 2-வது பெண் என்ற பெருமையையும், வழக்கறிஞர் நிலையிலிருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் இரண்டாவது பெண் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். இவரது நியமனம் நீதித்துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.