🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

அண்ணாமலை IPS அவர்கள் பாஜகவில் இருந்து வெளியேறி புதிய கட்சியினை உருவாக்கும் நோக்கத்தில் மாறுவோம் மாற்றுவோம் என்ற கொள்கையின் மூலம் தமிழ்நாடு முழுவதும் புதிய நிர்வாகிகளை சேர்க்கும் பணி அங்கெங்கே …

தமிழ்நாடு : தமிழகத்​தில் மோட்​டார் வாகன ஆய்​வாளர், இளநிலை பொறி​யாளர், கிராம நிர்​வாக அலு​வலர் (விஏஓ) உட்பட 7 பேரை லஞ்ச ஒழிப்​புத் துறை​யினர் கைது செய்​துள்​ளனர். தமிழகத்​தின் பல்​வேறு …

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், கலசப்பாக்கம் தொகுதி, புதுப்பாளையம் ஒன்றியம் காரப்பட்டு பகுதியில் ஜோகி செட்டி இன மக்கள் தலைமுறைகளாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டு நிலத்துக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதால் …

கோவை, கோவை அரசு மருத்துவமனையில் சிறை கைதிகள் சிகிச்சைக்காக தங்கி இருந்த வார்டில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு பிம்முடு அஜித்குமார் என்ற விசாரணை கைதி தப்பி ஓடினார். அவர் ஆன்லைன் …

திருவண்ணாமலை to காஞ்சி சாலையில் விஸ்வநாதபுரம் கூட்டு சாலை அருகே குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தில் மோதாமல் தவிர்ப்பதற்கு எதிர்ப்புறம் திரும்பிய கார் நிலை தடுமாறி சாலை விபத்தில் சிக்கியது …

முக்கிய செய்தி

“எங்கள் தலைவா தலைமை ஏற்க வா…” – கோவையில் அண்ணாமலை ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

கோவை: தமிழக பாஜக-வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, “எங்கள் தலைவா தலைமை ஏற்க வா…!” என்ற அதிரடி வாசகங்களுடன் கோவையின் பிரதான சாலைகள் மற்றும் தெருக்களில் ஒட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

பொள்ளாச்சியில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.. கனிம வளத்துறை அமைச்சருக்கு விவசாயிகள் கோரிக்கை

கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளது. இப்பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவில் கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு கனிம வள அதிகாரிகள் மற்றும் அதன் பகுதியில் உள்ள காவல்துறையினர்களுக்கு குவாரி உரிமையாளர்கள் கணிசமாக மாதம் மாதம் கவனித்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.இது தொடர்பாக பேசிய விவசாயிகள் பலகட்ட போராட்டம் நடத்தினாலும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.. குறிப்பிட்ட அளவு மட்டுமே வெட்டி எடுக்க அனுமதி உண்டு. ஆனால் குவாரியில் வெடிபொருட்கள் நிரப்பி வெடிக்க செய்து டாரஸ் லாரி மூலம் கேரளாவுக்கு கடத்தி வருகின்றனர்.குவாரியில் தேங்கும் கழிவு நீர் அப்பகுதியில் உள்ள ஓடையில் கலக்கிறது. இதனால் மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது . கோவை மாவட்ட ஆட்சித் தலைவர், பொள்ளாச்சி சார் ஆட்சியர் என அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று ஆதங்கம் தெரிவிக்கிறார்கள் விவசாயிகள்.

திருவண்ணாமலை புதிய மாவட்ட ஆட்சியராக வந்தனா கார்க் இன்று பதவி ஏற்றார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (31.05.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.

கோவையில் பெட்ரோல் நிரம்பிய பீர் பாட்டில் வீசி தாக்குதல், போலீசார் தீவிர தேடுதல் வேட்டை:

கோவை தொண்டாமுத்தூர் அருகே கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில், இன்ஸ்டாகிராம் காதலை முறித்ததால் ஆத்திரமடைந்த சென்னை ரவுடி கார்த்தி என்கிற மாரியப்பன் (30), தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் நிரப்பிய பீர் பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் வாசலில் இருந்த காலணி ஸ்டாண்ட் தீப்பற்றியது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. திண்டுக்கல்லில் குண்டாஸ் வழக்கில் சிறை சென்ற கார்த்தி உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது 3 தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை பெரிய கடை வீதியில் 1 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்க முயற்சி:

பெரிய கடை வீதி பகுதியில் சுமார் ரூ. 1 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடிக்க முயன்ற இரண்டு இளைஞர்கள் கோவையில் கைது செய்யப்பட்டனர். தனியார் நிறுவனம் ஒன்றில் ரூ. 37.5 லட்சம் மதிப்புள்ள மூலப்பொருள் திருட்டு தொடர்பாக ஸ்டோர் மேனேஜர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களை தீவிரமாக கண்காணிக்க கோவை மாநகர காவல் துறையின் புதிய அதிரடிப் பிரிவு!

இன்றைய நவீன டிஜிட்டல் காலகட்டத்தில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. தகவல்களை விரைவாகப் பகிர்வதற்கு இந்தத் தளங்கள் உதவினாலும், சில நேரங்களில் வதந்திகளைப் பரப்புவதற்கும், பொது அமைதியைக் கெடுப்பதற்கும், குற்றச் செயல்களைத் திட்டமிடுவதற்கும் சமூக விரோதிகளால் இவை தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்தச் சவால்களைச் சமாளிக்கும் பொருட்டும், இணைய வழி சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளை முன்கூட்டியே தடுத்துக் கண்காணிக்கும் பொருட்டும், கோயம்புத்தூர் மாநகர காவல் துறை ஒரு புதிய “சிறப்புக் கண்காணிப்புப் பிரிவை” (Special Cell) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. பொதுமக்களுக்கு காவல் துறையின் முக்கிய அறிவுறுத்தல்கள்புதிய பிரிவின் தொடக்கத்தை ஒட்டி கோவை மாநகர காவல் துறை பொதுமக்களுக்கு சில அவசியமான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது:சரிபார்க்காத தகவல்களைப் பகிர வேண்டாம்: வாட்ஸ்அப் அல்லது பிற செயலிகளில் வரும் செய்திகளின் உண்மைத்தன்மையை ஆராயாமல் மற்ற குழுக்களுக்கு (Groups) ‘ஃபார்வர்டு’ செய்யக் கூடாது.சட்டப்படியான எச்சரிக்கை: வதந்திகளை உருவாக்குபவர்களுக்கு எந்த அளவிற்குத் தண்டனை உண்டோ, அதே அளவிற்கு அதனைப் பரப்புபவர்களுக்கும் (Sharers) சட்டப்படி தண்டனை உண்டு.விழிப்புணர்வு: இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சமூக ஊடகங்களை தங்களது கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்; தேவையில்லாத விவாதங்களில் ஈடுபட்டு தங்களது எதிர்காலத்தை வீணடித்துக் கொள்ளக் கூடாது.பாதுகாப்பான கோவைக்கான தொழில்நுட்பப் பாய்ச்சல்கோவை மாநகர காவல் துறையின் இந்த புதிய சிறப்புக் கண்காணிப்புப் பிரிவு, டிஜிட்டல் குற்றங்களை ஒடுக்குவதில் ஒரு மைல்கல்லாகும். இணையப் பாதுகாப்பை பலப்படுத்துவதன் மூலம் நிஜ உலகிலும் குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும். காவல் துறையின் இந்த நவீன முயற்சிக்கு பொதுமக்களும் தங்களது இணையப் பயன்பாட்டில் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்பது அவசியமாகிறது.

திருச்செந்தூரில் தரிசனத்திற்கு அமைச்சர் என்று தெரியாமல் ரூ.4,000 கேட்ட அர்ச்சகர்கள்…

திருச்செந்தூர்,திருச்செந்தூர் முருகன் கோவிலில் விரைவு தரிசனத்திற்காக முறைகேடாக பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் வெளியாகின. இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திருச்செந்தூர் முருகன் கோவிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.பணம் வசூலிக்கப்படுவதை கண்டுபிடிக்க பக்தர் போல் கோவிலுக்கு வந்தார். அப்போது முறைகேடான வழியில் தரிசனத்திற்கு அழைத்துச் செல்ல சில அர்ச்சகர்கள் ரூ.4,000 கட்டணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அமைச்சர் நேரடியாக ஜி-பே (GPay) மூலம் ரூ.4,000 பணத்தை செலுத்தியுள்ளார். பின்னர் அவர் அமைச்சர் என்பது தெரியவந்த நிலையில், பணம் பெற்ற அர்ச்சகர்கள் கையும் களவுமாக சிக்கினர்.இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கோவிலில் நடைபெற்று வந்த பல்வேறு முறைகேடுகள் குறித்து அமைச்சர் விசாரணை நடத்தினார். ஆய்வின் போது பக்தர்களிடம் விதிமுறைகளை மீறி பணம் வசூலித்தது உள்ளிட்ட பல குறைபாடுகள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.இதையடுத்து சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டதுடன், தங்களது தவறுகளை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கடிதம் எழுதித் தருமாறு அமைச்சர் உத்தரவிட்டார். மேலும், கோவிலில் பக்தர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் இந்த திடீர் ஆய்வு மற்றும் அதிரடி நடவடிக்கை திருச்செந்தூர் கோவில் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.முன்னதாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விரைவு தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனத்திற்காக பக்தர்களிடம் முறைகேடாக ரூ.2,000 முதல் ரூ.10 ஆயிரம் வரை வசூலிக்கப்படுவதாக சென்னையை சேர்ந்த சண்முகராஜன், ஐகோர்ட்டு மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு, பக்தர்கள் அமைதியான முறையில் வழிபட தேவையான ஏற்பாடுகளை செய்வது அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தின் கடமை என தெரிவித்தது.மேலும், பக்தர்களிடம் சட்டவிரோதமாக பணம் வசூலிக்கும் அங்கீகாரமற்ற நபர்களை போலீசார் உடனடியாக அப்புறப்படுத்தி, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சாமளாபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் சார்பில் பட்டினி தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

மங்கலம்,மே.29-உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் -சாமளாபுரம் பேரூராட்சியில் ஏழை எளிய மக்களுக்கு நேற்று (வியாழக்கிழமை) அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு கோவை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் செயலாளர் எஸ்.பாபு-அவர்கள் முன்னிலை வகித்தார்.இந்த நிகழ்ச்சியானது தமிழக வெற்றிக் கழகத்தின்சாமளாபுரம் பேரூராட்சி செயலாளர் ஜி.ஏ.அந்தோணிஅருள் தலைமையில் நடைபெற்றது.மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சாமளாபுரம் பேரூராட்சி துணை செயலாளர்கள் முருகேசன் நடராஜன்,சாமளாபுரம் பேரூராட்சி பொருளாளர் ராஜேஷ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் பிரியங்கா,லோகேஸ்வரன்,விஜய்பாரதி, மற்றும் சாமளாபுரம் நிர்வாகிகள் நேதாஜி, ஆனந்தகுமார், கார்த்தி,தாமோதரன்,7-வது வார்டு கார்த்தி, விவேக், வேலாயுதம் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கோவை, திருப்பூர் விசைத்தறியாளர்களுக்கு இழுத்தடிக்கப்படும் கூலி உயர்வு

கோவை: பல ஆண்டு காலமாக இழுத்தடிக்கப்படும் கூலி உயர்வு விவகாரத்தால், விசைத்தறியாளர்கள் சட்டப் பாதுகாப்புடன் ஒப்பந்த கூலி உயர்வை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி தொழிலை நம்பி, சுமார் 4 லட்சம் குடும்பங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெற்று வருகின்றன.1990-ம் ஆண்டு முதல் 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி ஒப்பந்தம் செய்து வந்தனர். ஆனால், தற்போது ஜவுளி உற்பத்தியாளர்களிடம் உரிய கூலி வழங்கக் கோரி விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டமாக உள்ளது.விசைத்தறியாளர்கள் கூறும்போது, “தொழிலாளர்களின் சம்பள உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு, வாடகை உயர்வு, மின் கட்டணம், தொழிலாளர்களின் வீட்டு வாடகை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் விசைத்தறி தொழில் முடங்கியுள்ளது.இத்தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள், வேறு தொழிலுக்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். உரிய கூலியை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

பணிக்குத் திரும்பிய மேயர் பிரியா.. புதிய ஆட்சி அமைந்த பின் முதன்முறையாக வருகை!

தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்று 20 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை சென்னை மாநகராட்சி மேயராக இருக்கும் பிரியா, முதலமைச்சரைச் சந்திக்க வில்லை. மேலும் கடந்த 6ஆம் தேதி முதல் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தேர்தல் பணி முடிந்து வழக்கமான பணிக்குத் திரும்பி உள்ளனர். ஆனால், கடந்த 20 நாட்களுக்கு மேலாக அரசுப் பணிக்குத் திரும்பாத மேயர் பிரியாராஜன், நீண்ட ஓய்வுக்குப் பிறகு இன்று ரிப்பன்மாளிகை வந்து அலுவல் பணியைத் தொடங்கினார். சென்னை மாநகராட்சியின் 75ஆவது ஆணையாளராக பொறுப்பேற்றுள்ள சமீரன் ஐஏஎஸ் மேயர் பிரியா ராஜனைச் சந்தித்து வாழ்த்துபெற்றார்.