🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா சுண்டக்காபாளையம் கிராமத்தில் பூட்டி வைத்திருந்த கதவை உடைத்து 50 பவுன் தங்க நகை கொள்ளை அடித்த மர்ம நபர்கள். ரமேஷ் s/o சம்பத் இவர் …

நாவக்குறிச்சி ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றம்சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள நாவக்குறிச்சி ஏரியில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் தனபால் முன்னிலையில் நடைபெற்றது.நீர்நிலைகளை பாதுகாக்கும் நோக்கில் …

எஸ்.ஆர். சிவலிங்கம் எம்.பி.க்கு பிறந்தநாள் வாழ்த்து குவிந்ததுதி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துசேலம், ஜூன் 10–சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான எஸ்.ஆர். சிவலிங்கம் எம்.பி. …

தமிழக வெற்றிக் கழகம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களின் ஆணையின்படிகழக பொதுச் செயலாளர்மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு N ஆனந்த்அவர்களின் நல்வழியில் திருவண்ணாமலை மேற்கு மாவட்டம் …

பொள்ளாச்சி வால்பாறை மெயின் ரோடு ஆவல்சினம்பாளையம் சுப்பிரமணியம் அவர்களின் மகன் நந்தகுமார் என்பவர் பொள்ளாச்சி கோவை மெயின்ரோட்டில் உள்ள சிடிசி டிப்போ பின்புறம் கடந்த நான்கு வருடமாக டீக்கடை நடத்தி …

முக்கிய செய்தி

கோவை மாவட்டம் வால்பாறை டு அதிரப்பள்ளி பகுதியில் கனமழை;

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை டு அதிரப்பள்ளி ரோட்டில் நேற்று மழை பெய்ததால் அதிரப்பள்ளி செல்லும் வழியில் உள்ள வாட்ச் மரம் பகுதியில் முன்பு பாலம் மழையில் அடித்து சென்றதால் பொதுமக்களை அந்த வழியாக செல்ல அனுமதி இல்லை வனத்துறை தகவல் பாலத்தை சரி செய்யும் பணி ஒரு வாரத்துக்கு பணிகள் நடைபெறலாம் என தகவல்

சென்னை முன்னாள் காவல் ஆணையர் அருண் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

சென்னை முன்னாள் காவல் ஆணையர் அருண் நேரில் ஆஜராக சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்த வழக்கில் சென்னை ஐகோர்ட் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு பிறப்பித்த அதிகாரி யார்? என்றும் நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பியதோடு வரும் 27 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அருண் ஐபிஎஸ்க்கு உத்தரவிட்டுள்ளனர்.

ரவுடிகள் வேட்டை.. தமிழ்நாட்டில் 3 நாட்களில் 844 ரவுடிகள் கைது.. தமிழக போலீஸ் வெளியிட்ட முக்கிய தகவல்!

சென்னை: தமிழகத்தில் கடந்த 3 நாள்களில் 844 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையில், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 267 கிலோ கஞ்சா, 2,476 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் இவற்றின் மதிப்பு ரூ. 1.43 கோடி என்றும் தெரிவிக்கப்படுள்ளது.

கோவை மாவட்ட எஸ்பியாக அல்லாடிபள்ளி பவன் குமார் பொறுப்பேற்றார் சக அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதுவரை எஸ்பியாக இருந்த கார்த்திகேயன் தாம்பரத்தில் துணை கமிஷனர் பொறுப்பை ஏற்றார். கோவை போக்குவரத்து துணை கமிஷனராக இருந்த அசோக் குமார் தென்காசி மாவட்ட எஸ்பி யாக மாற்றப்பட்டார்.

கோவையில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை

கோவையில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாக்லேட் தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் செல்லப்பட்ட இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வீதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, வீட்டின் அருகே உள்ள தென்னந்தோப்புக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளர் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்த மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி தலைமையிலான காவல்துறையினர், 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளைக் கைது செய்து போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், க்ரைம் எக்ஸ்பிரஸ் பத்திரிகை மற்றும் பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சியர் பதிவேற்றார்.

சேலம் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சித்தலைவராக திரு. க. இளம் பகவத், இ.ஆ.ப., அவர்கள் நேற்று (18.05.2026 சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்கள்.பொறுப்பேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு புதிய மாவட்ட ஆட்சித்தலைவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.புதிய மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுள்ள திரு. க. இளம் பகவத், இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட நிர்வாக பணிகளை சிறப்பாக மேற்கொள்வதாக தெரிவித்தார். சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்

திருவண்ணாமலை மாவட்டம் விண்ணவனூர் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா பாச்சல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விண்ணவணூர் கிராமம் நயரா பெட்ரோல் பங்க் எதிரே சுமார் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் நபரின் பிரேதம் உள்ளது.இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் திருவண்ணாமலை மாவட்டம் பாச்சல் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்குமாறு பாச்சல் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது செல் 9498100475

திருவண்ணாமலை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் முன்னே சென்ற டிராக்டர் மீது மோதிய கார் .

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா தனக்கவுண்டான் புதூர் பேருந்து நிலையம் அருகே திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்த கார் அதே திசையில் முன்னே சென்று கொண்டிருந்த ட்ராக்கர் திடீரென எந்த சிக்கலும் இன்றி வலது புறமாக திரும்பியதால் பின்னே வந்த கார் டிராக்டர் மீது மோதியதில் கார் பலத்த சேதம் அடைந்தது காரை ஓட்டியவர் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயங்களும் இன்றி உயிர்த்தபினார் இதனால் அங்கு சிறிது நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டது மாவட்ட செய்தியாளர் பு. பிரபு