
கோவை: தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அறிவிக்கப்பட்ட திட்டங்களை விட அறிவிக்கப்படாத சர்ச்சைகள் தான் ஏராளமான உள்ளன. முதலமைச்சர் விஜயும், அமைச்சர்களும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். ஆய்வு என்கிற பெயரில் ரீல்ஸ் மோகத்துடன் வலம் வருவது, சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறுவது நடந்து வருகிறது. அந்த வரிசையில் மூத்த அமைச்சர் செங்கோட்டையனும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சட்டம் ஒழுங்கு பாதிப்பு குறித்த கேள்விக்கு உரிய பதில் அளிக்காமல் செங்கோட்டையன் பத்திரிகையாளர்களை மிரட்டும் தொனியில் பேசியதால், செய்தியாளர்கள் கோபமடைந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.