எஸ்.ஆர். சிவலிங்கம் எம்.பி.க்கு பிறந்தநாள் வாழ்த்து குவிந்ததுதி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துசேலம், ஜூன் 10–சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான எஸ்.ஆர். சிவலிங்கம் எம்.பி. இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.இதையொட்டி தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அவரை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மேலும், சமூக வலைதளங்களிலும் ஏராளமானோர் வாழ்த்து பதிவுகளை வெளியிட்டு தங்களது அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தினர்.பிறந்தநாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைவாசல் மத்திய ஒன்றிய கழக செயலாளர் சாத்தப்பாடி மணி (எ) க. பழனிசாமி, முன்னாள் ஒன்றிய கழக பொறுப்பாளர் வரகூர் செ. செயபாலன், மாவட்ட பிரதிநிதி மு. தேவேந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் சித்தேரி ப. கண்ணுசாமி, காமக்காபாளையம் கிளை கழக செயலாளர் அ. செல்லையா, மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் நாவக்குறிச்சி மேலமலை, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளரும் நாவலூர் கிளை கழக செயலாளருமான கூ. கருப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.கழக வளர்ச்சிக்கும், மக்கள் நலப் பணிகளுக்கும் தொடர்ந்து பாடுபட்டு வரும் எஸ்.ஆர். சிவலிங்கம் எம்.பி. அவர்கள் நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல்நலத்துடனும் மக்கள் சேவையில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.பிறந்தநாளையொட்டி பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா சுண்டக்காபாளையம் கிராமத்தில் பூட்டி வைத்திருந்த கதவை உடைத்து 50 பவுன் தங்க நகை கொள்ளை அடித்த மர்ம நபர்கள். ரமேஷ் s/o சம்பத் இவர் …