சேலம் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக குத்தாலிங்கம் பொறுப்பேற்புசேலம், ஜூன் 19:சேலம் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி.) ஐ.பி.எஸ். அதிகாரி எஸ். குத்தாலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் அண்மைய ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்ற உத்தரவின் அடிப்படையில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்கு முன்பு சென்னை பெருநகர காவல்துறையில் தி.நகர் துணை ஆணையராக பணியாற்றிய குத்தாலிங்கம், தற்போது சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த கவுதம் கோயல், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.புதிய எஸ்.பி. குத்தாலிங்கம் தலைமையில் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை மேலும் வலுப்படுத்துதல், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல், பொதுமக்கள் குறைகளை விரைந்து தீர்த்தல் மற்றும் போக்குவரத்து ஒழுங்கை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் புதிய காவல் கண்காணிப்பாளருக்கு வாழ்த்துகளை தெரிவித்து, மாவட்டத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்துவார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம். இன்றும் தொடரும் 7 ஆம் நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே 10 முத்தூர் …
