
மங்கலம்,மே.29-
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் -சாமளாபுரம் பேரூராட்சியில் ஏழை எளிய மக்களுக்கு நேற்று (வியாழக்கிழமை) அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு கோவை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் செயலாளர் எஸ்.பாபு-அவர்கள் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியானது தமிழக வெற்றிக் கழகத்தின்
சாமளாபுரம் பேரூராட்சி செயலாளர் ஜி.ஏ.அந்தோணிஅருள் தலைமையில் நடைபெற்றது.மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சாமளாபுரம் பேரூராட்சி துணை செயலாளர்கள் முருகேசன் நடராஜன்,சாமளாபுரம் பேரூராட்சி பொருளாளர் ராஜேஷ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் பிரியங்கா,லோகேஸ்வரன்,விஜய்பாரதி, மற்றும் சாமளாபுரம் நிர்வாகிகள் நேதாஜி, ஆனந்தகுமார், கார்த்தி,தாமோதரன்,7-வது வார்டு கார்த்தி, விவேக், வேலாயுதம் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.