🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் தவிக்கும் நரசிங்கநல்லூர் கிராம மக்கள்!4 கி.மீ. தூரம் ஆபத்தான பாதையில் குழந்தைகள் பயணம் – 61 குழந்தைகளுக்கு கல்வி, மதிய உணவு கிடைக்காத …

காவலர் தின நிகழ்ச்சியில் போலீசார் உறுதிமொழி ஏற்புசேலம்: சேலம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சந்தோஷ் …

திருவண்ணாமலை மாவட்டம் 🚨🚨⚡ அடிப்படை வசதிகள் இல்லாத சுங்கச்சாவடி… இருளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்!திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா காரியமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில், பல நாட்களாக முக்கியமான மின்விளக்குகள் …

நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு வீடுகள் கட்டித்தர கோரிக்கை திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தச்சூர் கிராமத்தில் வசிக்கும் 40 நரிக்குறவர் இன மக்களுக்கு தமிழக அரசின் வெற்றி வீடு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்பேத்கர் சிலை அருகில் கவன ஈர்ப்பு ஊர்வலம். ஆர்ப்பாட்டம். தோழர்.மு. அறிவழகன் தலைவர். தலைமையில்.ஆகஸ்ட் 24. சாத்தனூர் நீர்த்தேக்கம் பகுதியில் உயிர் பலி ஏற்படுவதைத் தடுத்து …

முக்கிய செய்தி

  • Home /
  • DISTRICT /
  • நாவக்குறிச்சி அருள்மிகு பிடாரியம்மன் திருக்கோவிலில் கல்வெட்டு அமைப்புவருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் பணி நிறைவு.

நாவக்குறிச்சி அருள்மிகு பிடாரியம்மன் திருக்கோவிலில் கல்வெட்டு அமைப்புவருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் பணி நிறைவு.

நாவக்குறிச்சி அருள்மிகு பிடாரியம்மன் திருக்கோவிலில் கல்வெட்டு அமைப்புவருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் பணி நிறைவுசேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், நாவக்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பிடாரியம்மன் திருக்கோவிலில், மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் Cont.P. No.2440/2026 in W.P. No.7771/2026 வழக்கில் கடந்த 25.02.2026 அன்று பிறப்பித்த உத்தரவின்படி, திருக்கோவில் பெயரைக் குறிக்கும் வகையில் “அருள்மிகு பிடாரியம்மன் திருக்கோவில்” என கல்வெட்டு அமைக்கும் பணி நடைபெற்றது.அதன்படி, 19.08.2026 அன்று நாவக்குறிச்சி கிராம எல்லைக்குட்பட்ட புல எண் 202/2-ல், கோவில் மற்றும் ஓடை அமைந்துள்ள பகுதியில், வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில், காவல்துறை பாதுகாப்புடன் “அருள்மிகு பிடாரியம்மன் திருக்கோவில்” என கல்வெட்டு அமைக்கப்பட்டது.இப்பணியின்போது வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.உயர்நீதிமன்ற உத்தரவின்படி நடைபெற்ற இந்நிகழ்வினால் நாவக்குறிச்சி கிராமத்தில் எவ்வித சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படவில்லை. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படாமல், கல்வெட்டு அமைக்கும் பணி அமைதியான முறையில் நிறைவு பெற்றது.சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்