🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் தவிக்கும் நரசிங்கநல்லூர் கிராம மக்கள்!4 கி.மீ. தூரம் ஆபத்தான பாதையில் குழந்தைகள் பயணம் – 61 குழந்தைகளுக்கு கல்வி, மதிய உணவு கிடைக்காத …

காவலர் தின நிகழ்ச்சியில் போலீசார் உறுதிமொழி ஏற்புசேலம்: சேலம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சந்தோஷ் …

திருவண்ணாமலை மாவட்டம் 🚨🚨⚡ அடிப்படை வசதிகள் இல்லாத சுங்கச்சாவடி… இருளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்!திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா காரியமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில், பல நாட்களாக முக்கியமான மின்விளக்குகள் …

நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு வீடுகள் கட்டித்தர கோரிக்கை திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தச்சூர் கிராமத்தில் வசிக்கும் 40 நரிக்குறவர் இன மக்களுக்கு தமிழக அரசின் வெற்றி வீடு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்பேத்கர் சிலை அருகில் கவன ஈர்ப்பு ஊர்வலம். ஆர்ப்பாட்டம். தோழர்.மு. அறிவழகன் தலைவர். தலைமையில்.ஆகஸ்ட் 24. சாத்தனூர் நீர்த்தேக்கம் பகுதியில் உயிர் பலி ஏற்படுவதைத் தடுத்து …

முக்கிய செய்தி

  • Home /
  • SPIRITUALITY /
  • Temple /
  • ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.

ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.

30/04/26சிறுவாச்சூர் அருகே அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் – பக்தர்கள் திரள், பிரம்மாண்ட அன்னதானம்!சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே அமைந்துள்ள சிறுவாச்சூர் திருவள்ளுவர் நகர் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகா முத்து மாரியம்மன், ஸ்ரீ துர்க்கை அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் விழா இன்று ஊர் பொதுமக்கள் சார்பில் மிகுந்த விமரிசையாக நடைபெற்றது.அதிகாலை முதலே யாகசாலை பூஜைகள், வேத மந்திர ஓதங்கள் நடைபெற்று, கலசங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டன. பின்னர் காலை சிறப்பு நேரத்தில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் அபிஷேகம் செய்யப்பட, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மன் தரிசனம் செய்து ஆனந்தமடைந்தனர்.விழாவை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களின் திரளான பங்கேற்பு காணப்பட்டது. இதையடுத்து ஊர் பொதுமக்கள் சார்பில் பிரம்மாண்டமான அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டு, நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் சுற்றுவட்டார கிராம மக்கள், பக்தர்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்