மக்காச்சோள பயிர் மேலாண்மை குறித்த பண்ணைப் பள்ளி பயிற்சிதலைவாசல், ஜூன் 17:சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டாரத்திற்குட்பட்ட காமக்காபாளையம் கிராமத்தில், அட்மா (ATMA) திட்டத்தின் கீழ் மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணைப் பள்ளி பயிற்சி நடைபெற்றது.பயிற்சிக்கு தலைவாசல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வேல்முருகன் தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.அவர் பேசுகையில், “தலைவாசல் வட்டார விவசாயிகள் ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து, இயற்கை வழி வேளாண்மைக்கு மாற வேண்டும். மண்ணின் வளத்தைப் பாதுகாத்து, சாகுபடி செலவைக் குறைப்பதன் மூலம் விவசாயிகள் தங்களது வருமானத்தை இரட்டிப்பாக்க முடியும்,” என்றார்.தொடர்ந்து, பயிற்சியாளர் பிரவீன், முறையான மண் மாதிரி சேகரிப்பு முறைகள் மற்றும் அதன் அவசியம் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தார். மேலும், பயிற்சியாளர் வரதராஜன், தரமான விதைத் தேர்வு மற்றும் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் நுண்ணீர் பாசன முறைகளின் முக்கியத்துவம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.இப்பயிற்சியில் கலந்து கொண்ட உதவி வேளாண்மை அலுவலர் ரவிக்குமார், வேளாண்மைத் துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு அரசு நலத்திட்டங்கள் மற்றும் நடப்பு மானிய விவரங்கள் குறித்து விளக்கமளித்தார்.பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரமேஷ் மற்றும் முத்துவேல் ஆகியோர் செய்திருந்தனர். இதில் காமக்காபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட முற்போக்கு விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று பயனடைந்தனர்.சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம். இன்றும் தொடரும் 7 ஆம் நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே 10 முத்தூர் …
