🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம். இன்றும் தொடரும் 7 ஆம் நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே 10 முத்தூர் …

நாவக்குறிச்சி ஏரியில் சட்டவிரோத மண் கொள்ளையா?மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள நாவக்குறிச்சி கிராம ஏரியில் வண்டல் மண் …

கோவை : கோவை அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் அந்தக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான செ.ம. வேலுசாமி,“அதிமுக ஆலமரம் போன்றது. தமிழகத்தை …

போளூர் வடக்கு ஒன்றியம் சார்பாக பொதுச் செயலாளர் புஷி ஆனந்த் அவர்கள் பிறந்தநாள் முன்னிட்டு படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் திருக்கோவில் சிறப்பு பூஜையும் மற்றும் அன்னதானம் நடைபெற்றது போளூர் வடக்கு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக விளையாட்டுத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ அர்ஜுனா அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் செங்கம் …

முக்கிய செய்தி

  • Home /
  • Uncategorized /
  • விபத்தை ஏற்படுத்தியதாகமாநகராட்சி துணை ஆணையாளர் கைது

விபத்தை ஏற்படுத்தியதாகமாநகராட்சி துணை ஆணையாளர் கைது

மங்கலம் , ஜூன். 20
கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 49). இவர் தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையராக பணியாற்றி சில மாதங்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கடந்த 10-ந் தேதி இவர் தனது காரில் பல்லடத்தில் இருந்து மங்களம் நோக்கி வந்து கொண்டிருந்தார். இவருடைய கார், மங்கலம் நால்ரோடு அருகே வந்தது. அப்போது மங்களம் பகுதியைச் சேர்ந்த ஹக்கீம் (52) என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது சரவணகுமார் ஓட்டி வந்த கார் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஹக்கீம் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சரவணகுமார் மது போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. இதை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.