🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம். இன்றும் தொடரும் 7 ஆம் நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே 10 முத்தூர் …

நாவக்குறிச்சி ஏரியில் சட்டவிரோத மண் கொள்ளையா?மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள நாவக்குறிச்சி கிராம ஏரியில் வண்டல் மண் …

கோவை : கோவை அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் அந்தக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான செ.ம. வேலுசாமி,“அதிமுக ஆலமரம் போன்றது. தமிழகத்தை …

போளூர் வடக்கு ஒன்றியம் சார்பாக பொதுச் செயலாளர் புஷி ஆனந்த் அவர்கள் பிறந்தநாள் முன்னிட்டு படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் திருக்கோவில் சிறப்பு பூஜையும் மற்றும் அன்னதானம் நடைபெற்றது போளூர் வடக்கு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக விளையாட்டுத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ அர்ஜுனா அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் செங்கம் …

முக்கிய செய்தி

  • Home /
  • SPIRITUALITY /
  • Temple /
  • சேலத்தில் 22 ஆம் ஆண்டு மெகா பரிசளிப்பு விழா.

சேலத்தில் 22 ஆம் ஆண்டு மெகா பரிசளிப்பு விழா.

சேலத்தில் 22-வது ஆண்டு மெகா பரிசளிப்பு விழா நாளை நடைபெறுகிறதுசேலம்:தமிழ்நாடு வீரசைவப் பேரவை, தலைமை ஜங்கம் சமூக நலச்சங்கம் மற்றும் நாகரத்தினம் அங்காளம்மாள் கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்தும் 22-வது ஆண்டு மெகா பரிசளிப்பு விழா நாளை (ஜூன் 28) காலை 10 மணிக்கு சேலம் சீல்நாயக்கன்பட்டி பைபாஸ் அருகிலுள்ள சந்திரா மகாலில் நடைபெறுகிறது.இவ்விழாவில் 2026-ம் ஆண்டு அரசு பொதுத் தேர்வுகளில் 80 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண்கள் பெற்ற 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர்.மேலும் மகான் பசவண்ணர் ஜெயந்தி விழா, அகில இந்திய வீரசைவ மகாசபை தலைவருக்கான பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழாக்களும் இணைந்து நடைபெறுகின்றன. மயிலம் பொம்மபுரம் ஆதீனம் பட்டம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் அருளாசி வழங்கியுள்ளனர்.விழாவில் அகில இந்திய வீரசைவ மகாசபை தலைவரும், கர்நாடக மாநில வனத்துறை அமைச்சருமான ஈஸ்வர் பி. கண்ட்ரே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார். அகில இந்திய வீரசைவ மகாசபை பொதுச் செயலாளர் ரேணுகா பிரசன்னா உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர்.தமிழ்நாடு வீரசைவப் பேரவை மாநிலத் தலைவர் நாகரத்தினம், தலைமை ஜங்கம் சமூக நலச்சங்க மாநிலத் தலைவர் ஏ.கே. நாகராஜன், அகில இந்திய வீரசைவப் பேரவை மாநில பொதுச் செயலாளர் பாலாஜி, பொருளாளர் விவேகானந்தன், மாநில பொதுச் செயலாளர் கலியமூர்த்தி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், இளைஞர் அணி, மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.தகுதியுள்ள மாணவ, மாணவியர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் விழாவில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்