🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் தவிக்கும் நரசிங்கநல்லூர் கிராம மக்கள்!4 கி.மீ. தூரம் ஆபத்தான பாதையில் குழந்தைகள் பயணம் – 61 குழந்தைகளுக்கு கல்வி, மதிய உணவு கிடைக்காத …

காவலர் தின நிகழ்ச்சியில் போலீசார் உறுதிமொழி ஏற்புசேலம்: சேலம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சந்தோஷ் …

திருவண்ணாமலை மாவட்டம் 🚨🚨⚡ அடிப்படை வசதிகள் இல்லாத சுங்கச்சாவடி… இருளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்!திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா காரியமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில், பல நாட்களாக முக்கியமான மின்விளக்குகள் …

நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு வீடுகள் கட்டித்தர கோரிக்கை திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தச்சூர் கிராமத்தில் வசிக்கும் 40 நரிக்குறவர் இன மக்களுக்கு தமிழக அரசின் வெற்றி வீடு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்பேத்கர் சிலை அருகில் கவன ஈர்ப்பு ஊர்வலம். ஆர்ப்பாட்டம். தோழர்.மு. அறிவழகன் தலைவர். தலைமையில்.ஆகஸ்ட் 24. சாத்தனூர் நீர்த்தேக்கம் பகுதியில் உயிர் பலி ஏற்படுவதைத் தடுத்து …

முக்கிய செய்தி

  • Home /
  • Uncategorized /
  • கோவை : நஞ்சுண்டாபுரத்தில் இருந்து வெள்ளலூருக்கு திட்டச்சாலை; மாநகராட்சி முயற்சித்தால் உருவாக்கலாம்:

கோவை : நஞ்சுண்டாபுரத்தில் இருந்து வெள்ளலூருக்கு திட்டச்சாலை; மாநகராட்சி முயற்சித்தால் உருவாக்கலாம்:

கோவை: கோவையில் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்ல பிரதான ரோடுகளையே பயன்படுத்த வேண்டியிருக்கிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, இணைப்பு சாலைகள், திட்ட சாலைகள் ஏற்படுத்த வேண்டும். குறைந்த பட்சமாக ஆண்டுக்கு 5 இணைப்பு சாலைகள் ஏற்படுத்த தொழில் துறையினர் கோருகின்றனர்.மனைப்பிரிவு அனுமதி பெறும்போது, வளர்ச்சி கட்டணமாக கோவை மக்கள் செலுத்திய தொகை, நகர ஊரமைப்புத் துறையில் கோடிக்கணக்கில் இருக்கிறது.அத்தொகையை கேட்டுப் பெற்று சாலைகள் உருவாக்க வேண்டும். ராமநாதபுரத்தில் இருந்து வெள்ளலுார் செல்லும் வாகன ஓட்டிகள், நஞ்சுண்டாபுரம் ரயில்வே பாலத்துக்கு கீழே உள்ள கரடுமுரடான ரோட்டில் செல்கின்றனர். இருபுறமும் புதர் மண்டி கிடக்கிறது; தெருவிளக்கு வசதி இல்லை என்பதால் இரவில் இந்த பாதையை பயன்படுத்துவது ஆபத்தானது. போத்தனுார் வழியாக வெள்ளலுார் செல்வது சுற்றுப்பாதை; பல கி.மீ. அலைய வேண்டும். நஞ்சுண்டாபுரம் மயானம் அருகே உள்ள வழித்தடத்தில் வெள்ளலுார் செல்ல, 60 அடி திட்டச்சாலை உருவாக்க, உள்ளூர் திட்ட குழுமத்தில் திட்ட வரைவு உள்ளது. ரயில்வே கேட் கடந்ததும் கந்தன் பிள்ளையார் ரோட்டின் இருபுறமும் நிலம் கையகப்படுத்தி, நொய்யல் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டினால் இணைப்பு சாலை கிடைக்கும்.வெள்ளலுாரில் இருந்தும், ராமநாதபுரத்தில் இருந்தும் வாகன ஓட்டிகள் சென்று வரலாம். அப்பகுதி விவசாயிகள் தாமாக முன்வந்து நிலம் தர முன்வருகின்றனர். மாநகராட்சி முயற்சித்து செயல்படுத்தினால் புதிதாக திட்டச்சாலை உருவாக்கலாம். மக்களின் அவஸ்தையை போக்கலாம்.