🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் தவிக்கும் நரசிங்கநல்லூர் கிராம மக்கள்!4 கி.மீ. தூரம் ஆபத்தான பாதையில் குழந்தைகள் பயணம் – 61 குழந்தைகளுக்கு கல்வி, மதிய உணவு கிடைக்காத …

காவலர் தின நிகழ்ச்சியில் போலீசார் உறுதிமொழி ஏற்புசேலம்: சேலம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சந்தோஷ் …

திருவண்ணாமலை மாவட்டம் 🚨🚨⚡ அடிப்படை வசதிகள் இல்லாத சுங்கச்சாவடி… இருளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்!திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா காரியமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில், பல நாட்களாக முக்கியமான மின்விளக்குகள் …

நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு வீடுகள் கட்டித்தர கோரிக்கை திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தச்சூர் கிராமத்தில் வசிக்கும் 40 நரிக்குறவர் இன மக்களுக்கு தமிழக அரசின் வெற்றி வீடு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்பேத்கர் சிலை அருகில் கவன ஈர்ப்பு ஊர்வலம். ஆர்ப்பாட்டம். தோழர்.மு. அறிவழகன் தலைவர். தலைமையில்.ஆகஸ்ட் 24. சாத்தனூர் நீர்த்தேக்கம் பகுதியில் உயிர் பலி ஏற்படுவதைத் தடுத்து …

முக்கிய செய்தி

  • Home /
  • DISTRICT /
  • உதயநிதி ஸ்டாலின் கைது செய்ததை அடுத்து தலைவாசலில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உதயநிதி ஸ்டாலின் கைது செய்ததை அடுத்து தலைவாசலில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உதயநிதி ஸ்டாலின் கைது: தலைவாசலில் திமுகவினர் சாலை மறியல்; ஏராளமானோர் கைதுசேலம், ஆக. 4:தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சேலம் கிழக்கு மாவட்டம், தலைவாசல் ஒருங்கிணைந்த ஒன்றிய திமுக சார்பில் செவ்வாய்க்கிழமை (ஆக. 4) கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.தலைவாசல் ஒன்றிய அலுவலகம் முன்பு தொடங்கிய போராட்டம் பின்னர் சேலம்–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலாக மாறியது. போராட்டத்திற்கு தலைவாசல் மத்திய ஒன்றிய கழகச் செயலாளர் சாத்தப்பாடி மணி (எ) க. பழனிசாமி தலைமை வகித்தார்.காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக தஞ்சாவூரில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய உதயநிதி ஸ்டாலினை கைது செய்த தமிழக அரசை கண்டித்து, போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதில் மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து, அருகிலுள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். கைதானவர்களில் தலைவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.இந்தப் போராட்டத்தால் சேலம்–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் காவல்துறையினர் போக்குவரத்தை சீரமைத்தனர்.

சேலம் செய்தியாளர் பாலமுருகன்