
கோவை : கோவை அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் அந்தக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான செ.ம. வேலுசாமி,
“அதிமுக ஆலமரம் போன்றது. தமிழகத்தை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி. தூய சக்தி என கூறி தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. தற்போது அந்த கட்சியின் பெண் வழக்கறிஞர் ஒருவரே, தமிழகம் முழுவதும் பணம் பெற்று கொண்டு அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டதாக வழக்கு தொடர்ந்துள்ளார்.கட்சி தொடங்கியதில் இருந்தே நான் பதவியுடன் இருந்தேன். கடந்த 13 வருட காலமாக கட்சியில் பதவியின்றி பல்வேறு அவமானங்களை சந்தித்தேன். பல கட்சிகளில் இருந்து எனக்கு அமைச்சர், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பதவிகளை தர முன்வந்தனர். பணம் கொடுத்தும் என்னை அழைத்தனர். நான் எந்த கட்சிக்கும் செல்லவில்லை. எங்கோ இருந்த என்னை சட்டமன்றத்திற்கு அனுப்பி அமைச்சராக்கியதும், பிறகு மேயராக்கியதும் இந்த கட்சி தான். எனக்கு அவமானம் ஏற்படும்போது வேறு எங்காவது சென்று விடலாமா என்று யோசித்துள்ளேன் என்றும் கண்ணீர் மல்க பேசினார்.