🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் தவிக்கும் நரசிங்கநல்லூர் கிராம மக்கள்!4 கி.மீ. தூரம் ஆபத்தான பாதையில் குழந்தைகள் பயணம் – 61 குழந்தைகளுக்கு கல்வி, மதிய உணவு கிடைக்காத …

காவலர் தின நிகழ்ச்சியில் போலீசார் உறுதிமொழி ஏற்புசேலம்: சேலம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சந்தோஷ் …

திருவண்ணாமலை மாவட்டம் 🚨🚨⚡ அடிப்படை வசதிகள் இல்லாத சுங்கச்சாவடி… இருளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்!திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா காரியமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில், பல நாட்களாக முக்கியமான மின்விளக்குகள் …

நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு வீடுகள் கட்டித்தர கோரிக்கை திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தச்சூர் கிராமத்தில் வசிக்கும் 40 நரிக்குறவர் இன மக்களுக்கு தமிழக அரசின் வெற்றி வீடு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்பேத்கர் சிலை அருகில் கவன ஈர்ப்பு ஊர்வலம். ஆர்ப்பாட்டம். தோழர்.மு. அறிவழகன் தலைவர். தலைமையில்.ஆகஸ்ட் 24. சாத்தனூர் நீர்த்தேக்கம் பகுதியில் உயிர் பலி ஏற்படுவதைத் தடுத்து …

முக்கிய செய்தி

  • Home /
  • EDUCATION /
  • அட்மா (ATMA) திட்டத்தின் கீழ் மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணை பள்ளி பயிற்சி நடைபெற்றது.

அட்மா (ATMA) திட்டத்தின் கீழ் மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணை பள்ளி பயிற்சி நடைபெற்றது.

மக்காச்சோள பயிர் மேலாண்மை குறித்த பண்ணைப் பள்ளி பயிற்சிதலைவாசல், ஜூன் 17:சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டாரத்திற்குட்பட்ட காமக்காபாளையம் கிராமத்தில், அட்மா (ATMA) திட்டத்தின் கீழ் மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணைப் பள்ளி பயிற்சி நடைபெற்றது.பயிற்சிக்கு தலைவாசல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வேல்முருகன் தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.அவர் பேசுகையில், “தலைவாசல் வட்டார விவசாயிகள் ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து, இயற்கை வழி வேளாண்மைக்கு மாற வேண்டும். மண்ணின் வளத்தைப் பாதுகாத்து, சாகுபடி செலவைக் குறைப்பதன் மூலம் விவசாயிகள் தங்களது வருமானத்தை இரட்டிப்பாக்க முடியும்,” என்றார்.தொடர்ந்து, பயிற்சியாளர் பிரவீன், முறையான மண் மாதிரி சேகரிப்பு முறைகள் மற்றும் அதன் அவசியம் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தார். மேலும், பயிற்சியாளர் வரதராஜன், தரமான விதைத் தேர்வு மற்றும் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் நுண்ணீர் பாசன முறைகளின் முக்கியத்துவம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.இப்பயிற்சியில் கலந்து கொண்ட உதவி வேளாண்மை அலுவலர் ரவிக்குமார், வேளாண்மைத் துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு அரசு நலத்திட்டங்கள் மற்றும் நடப்பு மானிய விவரங்கள் குறித்து விளக்கமளித்தார்.பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரமேஷ் மற்றும் முத்துவேல் ஆகியோர் செய்திருந்தனர். இதில் காமக்காபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட முற்போக்கு விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று பயனடைந்தனர்.சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்