🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் தவிக்கும் நரசிங்கநல்லூர் கிராம மக்கள்!4 கி.மீ. தூரம் ஆபத்தான பாதையில் குழந்தைகள் பயணம் – 61 குழந்தைகளுக்கு கல்வி, மதிய உணவு கிடைக்காத …

காவலர் தின நிகழ்ச்சியில் போலீசார் உறுதிமொழி ஏற்புசேலம்: சேலம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சந்தோஷ் …

திருவண்ணாமலை மாவட்டம் 🚨🚨⚡ அடிப்படை வசதிகள் இல்லாத சுங்கச்சாவடி… இருளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்!திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா காரியமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில், பல நாட்களாக முக்கியமான மின்விளக்குகள் …

நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு வீடுகள் கட்டித்தர கோரிக்கை திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தச்சூர் கிராமத்தில் வசிக்கும் 40 நரிக்குறவர் இன மக்களுக்கு தமிழக அரசின் வெற்றி வீடு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்பேத்கர் சிலை அருகில் கவன ஈர்ப்பு ஊர்வலம். ஆர்ப்பாட்டம். தோழர்.மு. அறிவழகன் தலைவர். தலைமையில்.ஆகஸ்ட் 24. சாத்தனூர் நீர்த்தேக்கம் பகுதியில் உயிர் பலி ஏற்படுவதைத் தடுத்து …

முக்கிய செய்தி

  • Home /
  • DISTRICT /
  • வீடு புகுந்து 50 பவுன் தங்க நகை கொள்ளை.

வீடு புகுந்து 50 பவுன் தங்க நகை கொள்ளை.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா சுண்டக்காபாளையம் கிராமத்தில் பூட்டி வைத்திருந்த கதவை உடைத்து 50 பவுன் தங்க நகை கொள்ளை அடித்த மர்ம நபர்கள். ரமேஷ் s/o சம்பத் இவர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவில் உள்ள பெண்ணாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் இவர் பெங்களூர் வாழக்காய் மண்டியில் வேலை பார்த்து வருகின்றார். கடந்த ஆறு மாதத்துக்கு முன் சுண்டகாபாளையம் கிராமத்தில் உள்ள ஒரு மாடி வீட்டை விலைக்கு வாங்கியுள்ளார். இவர் தன் சொந்த ஊரான பெண்ணாத்தூரில் உள்ள வீட்டை புதுப்பிப்பதற்காக அங்குள்ள வீட்டு சாமான்களை சுண்டக்காபாளையம் புதிய வீட்டிற்கு மாற்றி அங்கு தனது குடும்பத்தாருடன் வாழ்ந்து வந்திருக்கிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சொந்த ஊரான பெண்ணாத்தூர் திருவிழாவிற்கு சென்றிருக்கிறார். இவர்கள் சென்ற விஷயம் தெரிந்த யாரோ மர்ம நபர் இவர் வீட்டில் உள்ள முன் கதிவின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் சென்று அங்கு பீரோவை உடைத்து 50 சவரன் தங்க நகையும் 10,000 ஆயிரம் ரொக்க பணமும் திருடி சென்றதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த செங்கம் காவல்துறையினர் விரைந்து திருடு போன வீட்டை மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணரை வரவைத்து சோதனை செய்துள்ளனர். மற்றும் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்திய வருகின்றனர்.

மாவட்ட செய்தியாளர் P. பிரபு