சிறுவாச்சூரில் துர்க்கை அம்மன்–அய்யனார் சுவாமி தேரோட்டம்ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.தலைவாசல், ஜூலை 1–சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராமத்தில் அருள்மிகு துர்க்கை அம்மன்–அய்யனார் சுவாமி கோவில் ஆண்டு திருவிழாவையொட்டி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.திருவிழாவையொட்டி அதிகாலை முதல் கோவிலில் துர்க்கை அம்மன் மற்றும் அய்யனார் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மலர்கள் மற்றும் வண்ண அலங்காரங்களால் அழகுபடுத்தப்பட்ட தேரில் சுவாமிகள் எழுந்தருளினர்.அதனைத் தொடர்ந்து மேளதாளம் முழங்க, வேத மந்திரங்கள் ஒலிக்க, ஊர் பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் “அம்மன் அரோகரா”, “அய்யனார் அரோகரா” என்ற பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேருக்கு பெண்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர். பக்தர்கள் தேங்காய் உடைத்து, மலர் தூவி, நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.தேரோட்டத்தைக் காண சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவரும் சாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர்.விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருந்தன. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், அவசரகால சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணியில் ஈடுபட்டு, தேரோட்டம் சீரும் சிறப்புமாக நடைபெற ஒத்துழைத்தனர்.சேலம் கிழக்கு மாவட்ட நிருபர் பாலமுருகன்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம். இன்றும் தொடரும் 7 ஆம் நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே 10 முத்தூர் …
