🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் தவிக்கும் நரசிங்கநல்லூர் கிராம மக்கள்!4 கி.மீ. தூரம் ஆபத்தான பாதையில் குழந்தைகள் பயணம் – 61 குழந்தைகளுக்கு கல்வி, மதிய உணவு கிடைக்காத …

காவலர் தின நிகழ்ச்சியில் போலீசார் உறுதிமொழி ஏற்புசேலம்: சேலம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சந்தோஷ் …

திருவண்ணாமலை மாவட்டம் 🚨🚨⚡ அடிப்படை வசதிகள் இல்லாத சுங்கச்சாவடி… இருளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்!திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா காரியமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில், பல நாட்களாக முக்கியமான மின்விளக்குகள் …

நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு வீடுகள் கட்டித்தர கோரிக்கை திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தச்சூர் கிராமத்தில் வசிக்கும் 40 நரிக்குறவர் இன மக்களுக்கு தமிழக அரசின் வெற்றி வீடு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்பேத்கர் சிலை அருகில் கவன ஈர்ப்பு ஊர்வலம். ஆர்ப்பாட்டம். தோழர்.மு. அறிவழகன் தலைவர். தலைமையில்.ஆகஸ்ட் 24. சாத்தனூர் நீர்த்தேக்கம் பகுதியில் உயிர் பலி ஏற்படுவதைத் தடுத்து …

முக்கிய செய்தி

  • Home /
  • DISTRICT /
  • சேலம் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக(SP) ஐபிஎஸ் அதிகாரி எஸ். குத்தாலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக(SP) ஐபிஎஸ் அதிகாரி எஸ். குத்தாலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக குத்தாலிங்கம் பொறுப்பேற்புசேலம், ஜூன் 19:சேலம் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி.) ஐ.பி.எஸ். அதிகாரி எஸ். குத்தாலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் அண்மைய ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்ற உத்தரவின் அடிப்படையில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்கு முன்பு சென்னை பெருநகர காவல்துறையில் தி.நகர் துணை ஆணையராக பணியாற்றிய குத்தாலிங்கம், தற்போது சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த கவுதம் கோயல், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.புதிய எஸ்.பி. குத்தாலிங்கம் தலைமையில் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை மேலும் வலுப்படுத்துதல், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல், பொதுமக்கள் குறைகளை விரைந்து தீர்த்தல் மற்றும் போக்குவரத்து ஒழுங்கை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் புதிய காவல் கண்காணிப்பாளருக்கு வாழ்த்துகளை தெரிவித்து, மாவட்டத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்துவார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்