🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்* அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று (16.06.2026) செவ்வாய்க்கிழமை,*மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் MLA* அவர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் …

அண்ணாமலை IPS அவர்கள் பாஜகவில் இருந்து வெளியேறி புதிய கட்சியினை உருவாக்கும் நோக்கத்தில் மாறுவோம் மாற்றுவோம் என்ற கொள்கையின் மூலம் தமிழ்நாடு முழுவதும் புதிய நிர்வாகிகளை சேர்க்கும் பணி அங்கெங்கே …

தமிழ்நாடு : தமிழகத்​தில் மோட்​டார் வாகன ஆய்​வாளர், இளநிலை பொறி​யாளர், கிராம நிர்​வாக அலு​வலர் (விஏஓ) உட்பட 7 பேரை லஞ்ச ஒழிப்​புத் துறை​யினர் கைது செய்​துள்​ளனர். தமிழகத்​தின் பல்​வேறு …

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், கலசப்பாக்கம் தொகுதி, புதுப்பாளையம் ஒன்றியம் காரப்பட்டு பகுதியில் ஜோகி செட்டி இன மக்கள் தலைமுறைகளாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டு நிலத்துக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதால் …

கோவை, கோவை அரசு மருத்துவமனையில் சிறை கைதிகள் சிகிச்சைக்காக தங்கி இருந்த வார்டில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு பிம்முடு அஜித்குமார் என்ற விசாரணை கைதி தப்பி ஓடினார். அவர் ஆன்லைன் …

முக்கிய செய்தி

  • Home /
  • Uncategorized /
  • கோவையில் இருமுனை போட்டி வெல்ல போவது?

கோவையில் இருமுனை போட்டி வெல்ல போவது?

கோவையில் பத்துக்குப் பத்து வெல்வது யார்? – இறுதிக்கட்ட போரில் செந்தில் பாலாஜி, வேலுமணி!

சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை நெருங்கி யிருக்கும் நிலையில், `கோவை தங்களது கோட்டை’ என நிரூபிக்க செந்தில் பாலாஜி தலைமையிலான தி.மு.க-வும், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அ.தி.மு.க-வும் இங்கு சம பலத்துடன் மோதிக் கொள்வதால், தேர்தல் களம் அனல் பறக்கிறது.

கடந்த தேர்தலில் கோவையில் ஏற்பட்ட படுதோல்விக்கு பதிலடி தர வேண்டும் என செந்தில் பாலாஜியை கோவை தெற்குத் தொகுதியில் தி.மு.க. தலைமை களமிறக்கியிருக்கிறது. கோவையில் பத்துக்குப் பத்து வெல்ல வேண்டுமென்ற தலைமையின் கட்டளையை நிறைவேற்றிக் காட்ட வேண்டும் என செந்தில் பாலாஜியும், அதைத் தடுத்து தனது ‘பவரை’ மீண்டும் காட்ட வேண்டும் என எஸ்.பி.வேலுமணியும் தேர்தல் பணிகளை மேற்கொண்டிருக் கின்றனர்.

செந்தில் பாலாஜி அமைத்திருக்கும் இறுதிக்கட்ட தேர்தல் வியூகம் குறித்து மாவட்ட தி.மு.க நிர்வாகிகளிடம் பேசினோம். “கடந்த சட்டமன்றத் தேர்தலில் 10 ஆண்டுகள் எதிர்க் கட்சியாக இருந்ததால், போதிய பலம் இல்லாமல் தேர்தலைச் சந்தித்தோம். இருப்பினும், சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில்தான் கோவையில் பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இந்த முறை தி.மு.க ஆட்சியின் திட்டங்கள், சாதனைகளால் பலமான கட்சியாகவும், வலுவான கூட்டணியோடும் தேர்தலை எதிர்கொள்கிறோம்.