திருவண்ணாமலையில் மாதந்தோறும் சாதாரண நாட்களிலும் பௌர்ணமி அன்றும் மக்கள் கூட்டம் கிரிவலம் சுற்றும் வழக்கம் ஆந்திரா. கேரளா. கர்நாடகா மற்றும் சில மாநிலங்களில் இருந்தும் பல வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் கிரிவலம் சுற்றுவது வழக்கம். அதுமட்டுமின்றி வெளிநாட்டவர்கள் ஆன்மீக பூமியான திருவண்ணாமலையின் ரமணாஸ்வரம் விசிறி சாமியார் ஆசிரமங்கள் மற்றும் இன்னும் சில ஆசிரமங்கள் சென்று யோகாவில் ஈடுபட்டு அமைதியான சூழ்நிலையையும் இந்து கலாச்சாரத்தையும் மிகவும் விருப்பத்துடன் பின்பற்றி வருகின்றனர். அது மட்டுமின்றி திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அதிகப்படியான சித்தர்கள் வாழ்வதாக கூறப்படுகிறது. கிரிவலம் சுற்றுவது மூலமாக மக்கள் வேண்டுதல் நிறைவேறுகின்றது என்று கூறப்படுகிறது. இதையொட்டி நேற்று 30/04/2026 இரவு 9:51 PM அளவில் சித்ரா பௌர்ணமி தொடங்கி இன்று 01/05/2026 இரவு 11:07 வரை நீடிக்கும். எனவே சாதாரண நாட்கள் மற்றும் பௌர்ணமி நாட்கள் சுற்றுவதை விட இந்த வருட சித்ரா பௌர்ணமி அன்று ஆயிரக்கணக்கான வாகனங்களில் லட்சக்கணக்கானோர் வருகை தந்துள்ளனர். இந்தச் சித்ரா பௌர்ணமி அன்று கிரிவலம் வருவதினால் இந்த வருடம் முழுவதும் கிரிவலம் வந்து விரதம் இருப்பதற்கு சமம் என்று நம்பப்படுகிறது. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பிற்காக திருவண்ணாமலைக்கு வருகை தந்துள்ளனர். வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் இன்றி அனைத்து வாகனங்களும் அங்கேயும் நிறுத்தப்பட்டு கிரிவலம் சுற்றி மீண்டும் தங்கள் ஊருக்கு செல்ல தவிக்கின்றனர். இதனால் திருவண்ணாமலை உள்ளூர் வாசிகளும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றன.
மாவட்டச் செய்தியாளர். பு பிரபு
