🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம். இன்றும் தொடரும் 7 ஆம் நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே 10 முத்தூர் …

நாவக்குறிச்சி ஏரியில் சட்டவிரோத மண் கொள்ளையா?மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள நாவக்குறிச்சி கிராம ஏரியில் வண்டல் மண் …

கோவை : கோவை அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் அந்தக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான செ.ம. வேலுசாமி,“அதிமுக ஆலமரம் போன்றது. தமிழகத்தை …

போளூர் வடக்கு ஒன்றியம் சார்பாக பொதுச் செயலாளர் புஷி ஆனந்த் அவர்கள் பிறந்தநாள் முன்னிட்டு படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் திருக்கோவில் சிறப்பு பூஜையும் மற்றும் அன்னதானம் நடைபெற்றது போளூர் வடக்கு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக விளையாட்டுத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ அர்ஜுனா அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் செங்கம் …

முக்கிய செய்தி

  • Home /
  • SPIRITUALITY /
  • Temple /
  • சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையை நோக்கி குவிந்த வாகனங்களும் மக்கள் கூட்டங்களும்

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையை நோக்கி குவிந்த வாகனங்களும் மக்கள் கூட்டங்களும்

திருவண்ணாமலையில் மாதந்தோறும் சாதாரண நாட்களிலும் பௌர்ணமி அன்றும் மக்கள் கூட்டம் கிரிவலம் சுற்றும் வழக்கம் ஆந்திரா. கேரளா. கர்நாடகா மற்றும் சில மாநிலங்களில் இருந்தும் பல வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் கிரிவலம் சுற்றுவது வழக்கம். அதுமட்டுமின்றி வெளிநாட்டவர்கள் ஆன்மீக பூமியான திருவண்ணாமலையின் ரமணாஸ்வரம் விசிறி சாமியார் ஆசிரமங்கள் மற்றும் இன்னும் சில ஆசிரமங்கள் சென்று யோகாவில் ஈடுபட்டு அமைதியான சூழ்நிலையையும் இந்து கலாச்சாரத்தையும் மிகவும் விருப்பத்துடன் பின்பற்றி வருகின்றனர். அது மட்டுமின்றி திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அதிகப்படியான சித்தர்கள் வாழ்வதாக கூறப்படுகிறது. கிரிவலம் சுற்றுவது மூலமாக மக்கள் வேண்டுதல் நிறைவேறுகின்றது என்று கூறப்படுகிறது. இதையொட்டி நேற்று 30/04/2026 இரவு 9:51 PM அளவில் சித்ரா பௌர்ணமி தொடங்கி இன்று 01/05/2026 இரவு 11:07 வரை நீடிக்கும். எனவே சாதாரண நாட்கள் மற்றும் பௌர்ணமி நாட்கள் சுற்றுவதை விட இந்த வருட சித்ரா பௌர்ணமி அன்று ஆயிரக்கணக்கான வாகனங்களில் லட்சக்கணக்கானோர் வருகை தந்துள்ளனர். இந்தச் சித்ரா பௌர்ணமி அன்று கிரிவலம் வருவதினால் இந்த வருடம் முழுவதும் கிரிவலம் வந்து விரதம் இருப்பதற்கு சமம் என்று நம்பப்படுகிறது. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பிற்காக திருவண்ணாமலைக்கு வருகை தந்துள்ளனர். வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் இன்றி அனைத்து வாகனங்களும் அங்கேயும் நிறுத்தப்பட்டு கிரிவலம் சுற்றி மீண்டும் தங்கள் ஊருக்கு செல்ல தவிக்கின்றனர். இதனால் திருவண்ணாமலை உள்ளூர் வாசிகளும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றன.

மாவட்டச் செய்தியாளர். பு பிரபு