18/04/26சேலம் மாவட்டம் கெங்கவல்லி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பச்சமலை மலைப்பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்று வருகிறது. கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு அ. நல்லதம்பி அவர்கள், பச்சமலை மலைப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் வீடு வீடாக சென்று மக்களிடம் சந்தித்து, இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.மேலும், மக்களுடன் இணைந்து நடனம் ஆடி உற்சாகத்தை ஏற்படுத்திய அவர், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த நிகழ்ச்சியில் கெங்கவல்லி மேற்கு ஒன்றிய செயலாளர் திரு துரை ரமேஷ் அவர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பல பொதுமக்கள் கலந்து கொண்டு உற்சாகமாக ஆதரவு தெரிவித்தனர்.இந்த பிரச்சாரம் மலைப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா பெயர் மட்டும் கிணற்றில் விவசாய நிலத்தில் உள்ள வறண்ட கிணற்றில் ஆனந்தி என்ற பெண்மணி தவறி விழுந்துள்ளார். தகவல் அறிந்த செங்கம் தீயணைப்புத் துறையினர் …
