திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்திலிருந்து போளூர் செல்லும் கனரக வாகனங்கள் பஜார் வழியே செல்வதினால் பாமர மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படுகின்றன. அந்த சாலை குறுகிய சாலையாக உள்ளதால் இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் ஒதுங்குவதற்கு கூட இடமில்லாமல் தவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ரோட்டோரம் உள்ள கடைக்காரர்களும் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த வாகன நெரிசலை தவிர்க்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். வெப்பம் அதிகமாக உள்ளதால் மாலை நேரங்களில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்க வருகின்றனர் எனவே கனரக வாகனங்களை மாலை நேரங்களில் சில மணி நேரம் டவுனுக்கு வெளியே நிற்க வைத்து மக்கள் கூட்டம் குறையும் சமயத்தில் வாகனங்களை செல்ல விடலாம் என்று பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு உள்ளது.
திருவண்ணாமலை செய்தியாளர் எம். சங்கர்.
