🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

தமிழக வெற்றிக் கழகம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களின் ஆணையின்படிகழக பொதுச் செயலாளர்மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு N ஆனந்த்அவர்களின் நல்வழியில் திருவண்ணாமலை மேற்கு மாவட்டம் …

பொள்ளாச்சி வால்பாறை மெயின் ரோடு ஆவல்சினம்பாளையம் சுப்பிரமணியம் அவர்களின் மகன் நந்தகுமார் என்பவர் பொள்ளாச்சி கோவை மெயின்ரோட்டில் உள்ள சிடிசி டிப்போ பின்புறம் கடந்த நான்கு வருடமாக டீக்கடை நடத்தி …

அண்ணாமலைக்கு வாழ்த்தும் கிடையாது, ஆதரவும் கிடையாது. அண்ணாமலை வந்ததால் பா.ஜ.க பலமடையவும் இல்லை; அவர் வெளியே சென்றதால் பலவீனம் அடையவும் இல்லை. அண்ணாமலையுடன் சென்றவர்கள் சுயநலவாதிகள். பொதுநலவாதிகள் பா.ஜ.க.விலேயே தொடருகின்றனர். …

கோவை: தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அறிவிக்கப்பட்ட திட்டங்களை விட அறிவிக்கப்படாத சர்ச்சைகள் தான் ஏராளமான உள்ளன. முதலமைச்சர் விஜயும், அமைச்சர்களும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். ஆய்வு என்கிற …

கோவை : தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் மற்றும் புதிய விதிகள் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. தமிழ்நாடு …

முக்கிய செய்தி

  • Home /
  • Uncategorized /
  • கோவையில் இருமுனை போட்டி வெல்ல போவது?

கோவையில் இருமுனை போட்டி வெல்ல போவது?

கோவையில் பத்துக்குப் பத்து வெல்வது யார்? – இறுதிக்கட்ட போரில் செந்தில் பாலாஜி, வேலுமணி!

சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை நெருங்கி யிருக்கும் நிலையில், `கோவை தங்களது கோட்டை’ என நிரூபிக்க செந்தில் பாலாஜி தலைமையிலான தி.மு.க-வும், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அ.தி.மு.க-வும் இங்கு சம பலத்துடன் மோதிக் கொள்வதால், தேர்தல் களம் அனல் பறக்கிறது.

கடந்த தேர்தலில் கோவையில் ஏற்பட்ட படுதோல்விக்கு பதிலடி தர வேண்டும் என செந்தில் பாலாஜியை கோவை தெற்குத் தொகுதியில் தி.மு.க. தலைமை களமிறக்கியிருக்கிறது. கோவையில் பத்துக்குப் பத்து வெல்ல வேண்டுமென்ற தலைமையின் கட்டளையை நிறைவேற்றிக் காட்ட வேண்டும் என செந்தில் பாலாஜியும், அதைத் தடுத்து தனது ‘பவரை’ மீண்டும் காட்ட வேண்டும் என எஸ்.பி.வேலுமணியும் தேர்தல் பணிகளை மேற்கொண்டிருக் கின்றனர்.

செந்தில் பாலாஜி அமைத்திருக்கும் இறுதிக்கட்ட தேர்தல் வியூகம் குறித்து மாவட்ட தி.மு.க நிர்வாகிகளிடம் பேசினோம். “கடந்த சட்டமன்றத் தேர்தலில் 10 ஆண்டுகள் எதிர்க் கட்சியாக இருந்ததால், போதிய பலம் இல்லாமல் தேர்தலைச் சந்தித்தோம். இருப்பினும், சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில்தான் கோவையில் பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இந்த முறை தி.மு.க ஆட்சியின் திட்டங்கள், சாதனைகளால் பலமான கட்சியாகவும், வலுவான கூட்டணியோடும் தேர்தலை எதிர்கொள்கிறோம்.