திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் 25/04/2026 ஒன்றியம் தலைமை ஆசிரியர்கள் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு செங்கம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) கோ.முருகன் தலைமையில் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நீ. கோபி ஏற்பாட்டில் பணி நிறைவு பாராட்டு விழா செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக செங்கம் வட்டாட்சியர் தனி (ஆதி.ந.பி) சி.முனுசாமி கலந்து கொண்டு பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு நினைவு கேடயங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.உடன் இந்நிகழ்ச்சியில் சுற்று வட்டார ஆசிரியப் பயிற்றுநர்கள் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரிய பெறுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.பின்னர் செங்கம் வட்டார கல்வி அலுவலர் சி. பிரகாஷ் நன்றியுரையாற்றினார்.
மாவட்டச் செய்தியாளர் எம்.சங்கர்
