🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா பெயர் மட்டும் கிணற்றில் விவசாய நிலத்தில் உள்ள வறண்ட கிணற்றில் ஆனந்தி என்ற பெண்மணி தவறி விழுந்துள்ளார். தகவல் அறிந்த செங்கம் தீயணைப்புத் துறையினர் …

தமிழ்நாடு முதல்வராக சி. ஜோசப் விஜய் அவர்கள் இன்று காலை 10 அளவில் நேரு விளையாட்டு அரங்கில் பதவி ஏற்றார். பதவியேற்று முதல் மூன்று சிறப்பம்சங்களில் கையெழுத்து போட்டார். அவை …

தமிழக புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்பு: தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.பதவியேற்பு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா விண்ணனுர் அருகே திருவண்ணாமலை இருந்து சிவசக்தி தனியார் பேருந்து செங்கம் நோக்கி சென்று கொண்டு இருந்தன. எதிரே வந்த பாண்டிச்சேரி பதிவெண் கொண்ட வாகனம் …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் திரு டி.எஸ்.வேலு அவர்கள் அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கிரி. மற்றும் டி வி கே வேட்பாளர் பாரதி …

முக்கிய செய்தி

  • Home /
  • DISTRICT /
  • செங்கம் சிவன் கோவில் அருகே போதை ஆசாமிகள் அட்டூழியம்.

செங்கம் சிவன் கோவில் அருகே போதை ஆசாமிகள் அட்டூழியம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகராட்சியில் அமைந்துள்ள சிவன் கோவில் முன்பு மாமிசக் கவர்களும் மது பாட்டில்களும் கொட்டிக் கிடக்கின்றன. இதனை கோவில் அறநிலைத்துறையும் நகராட்சியும் கண்டு கொள்ளாத நிலையில் உள்ளது பொதுமக்கள் கோவிலுக்கு அமைதியும் சந்தோஷத்தையும் தேடி தான் வருகின்றார்கள். ஆனால் இங்கு மது பிரியர்கள் மதுவை அருந்திவிட்டு பாட்டில்களை சிவன் கோவில் முன்னே உடைத்து விட்டு செல்கின்றார்கள். இதனால் கோவிலுக்கு வரும் பொதுமக்கள் குழந்தைகள் கால்களில் காயத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இதனை அறநிலைத்துறையோ கோவில் நிர்வாகமோ மற்றும் நகராட்சி அதிகாரிகளோ கண்டு கொள்வதாக தெரியவில்லை. இந்த நிலை நீடித்தால் சிவன் கோவில் மது அருந்தும் கூடமாக மாறிவிடும் என்ற அபாயம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்வார்களா என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

மாவட்ட செய்தியாளர் P. பிரபு