20/04/26சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் சூடு அதிகரித்துள்ளது. நல்லதம்பி அவர்களுக்கு ஆதரவாக, பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் மற்றும் தேர்தல் பொறுப்பாளர் மணிகண்டன் தலைமையில் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.இந்த பிரச்சாரத்தில் பாஜக ஒன்றிய தலைவர் GMS முருகன், ஒன்றிய துணைத் தலைவர் பச்சமுத்து, ஒன்றிய செயலாளர் அஜித் குமார், ஐடி விங் பொறுப்பாளர் வேலாயுதம் அங்கமுத்து கோபிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், மணிகண்டன் அவர்கள் மாநில செயற்குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார்.பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பெண்களிடையே இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு கோரி நோட்டீஸ்கள் வழங்கப்பட்டு, வாக்குகள் சேகரிக்கப்பட்டன. தேர்தல் பரப்புரை தீவிரமடைந்த நிலையில், கெங்கவல்லி தொகுதியில் அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ளது.சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்
10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் தவிக்கும் நரசிங்கநல்லூர் கிராம மக்கள்!4 கி.மீ. தூரம் ஆபத்தான பாதையில் குழந்தைகள் பயணம் – 61 குழந்தைகளுக்கு கல்வி, மதிய உணவு கிடைக்காத …
