திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா விண்ணனுர் அருகே திருவண்ணாமலை இருந்து சிவசக்தி தனியார் பேருந்து செங்கம் நோக்கி சென்று கொண்டு இருந்தன. எதிரே வந்த பாண்டிச்சேரி பதிவெண் கொண்ட வாகனம் விண்ணனுர் அருகே அரசு பேருந்தை முந்தும் போது எதிரே வந்த சிவசக்தி பேருந்தில் மோதின. பேருந்து ஓட்டுநர் மிக கவனமாக பேருந்தை ஓட்டியதால் பெரிய அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கப்பட்டன. காரில் இருந்த மூன்று பேர் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர்த்தப்பினர். இதனால் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.தகவல் அறிந்து வந்த பாய்ச்சல் காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை சரி செய்து காரில் வந்தவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாவட்டச் செய்தியாளர் பு. பிரபு