திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகராட்சியில் அமைந்துள்ள சிவன் கோவில் முன்பு மாமிசக் கவர்களும் மது பாட்டில்களும் கொட்டிக் கிடக்கின்றன. இதனை கோவில் அறநிலைத்துறையும் நகராட்சியும் கண்டு கொள்ளாத நிலையில் உள்ளது பொதுமக்கள் கோவிலுக்கு அமைதியும் சந்தோஷத்தையும் தேடி தான் வருகின்றார்கள். ஆனால் இங்கு மது பிரியர்கள் மதுவை அருந்திவிட்டு பாட்டில்களை சிவன் கோவில் முன்னே உடைத்து விட்டு செல்கின்றார்கள். இதனால் கோவிலுக்கு வரும் பொதுமக்கள் குழந்தைகள் கால்களில் காயத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இதனை அறநிலைத்துறையோ கோவில் நிர்வாகமோ மற்றும் நகராட்சி அதிகாரிகளோ கண்டு கொள்வதாக தெரியவில்லை. இந்த நிலை நீடித்தால் சிவன் கோவில் மது அருந்தும் கூடமாக மாறிவிடும் என்ற அபாயம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்வார்களா என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
மாவட்ட செய்தியாளர் P. பிரபு
