23/04/26ஆத்தூர் அருகே சப்-இன்ஸ்பெக்டர் திடீர் மரணம் – காவல்துறையில் சோகம்சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மல்லியகரை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் (58) மாரடைப்பால் உயிரிழந்தார்.தேர்தல் பணிக்காக நாயக்கியம்பட்டி பகுதிக்கு சென்றிருந்த அவர், இன்று இரவு சுமார் 8.30 மணியளவில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.அவரது திடீர் மறைவு காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஆழ்ந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்
10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் தவிக்கும் நரசிங்கநல்லூர் கிராம மக்கள்!4 கி.மீ. தூரம் ஆபத்தான பாதையில் குழந்தைகள் பயணம் – 61 குழந்தைகளுக்கு கல்வி, மதிய உணவு கிடைக்காத …
