
சென்னை: கோடை விடுமுறை முடிந்து விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் பள்ளி கட்டண வசூலில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார், சிபிஎஸ்இ மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் வகுப்பு வாரியாக கட்டண விவரங்களை வெளிப்படையாக எழுதி நுழைவு வாயிலில் வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.