*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்* அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று (16.06.2026) செவ்வாய்க்கிழமை,*மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் MLA* அவர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் சட்டமன்றத் தொகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கல் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.!இவ்விழாவில், *திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப அவர்கள் தலைமை வகிக்க, போளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.R.அபிஷேக் அவர்கள் முன்னிலை வகித்தார்.**நலத்திட்ட உதவிகள்**வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக 584 வீட்டுமனை பட்டா, 102 உட்பிரிவு பட்டா மாறுதல், 18 பட்டா மாறுதல், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பாக 4 பேருக்கு சக்கர நாற்காலி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு திட்டம் சார்பாக 703 புதிய குடும்ப அட்டை, கைத்தறி துறை சார்பாக 20 பேருக்கு தறி மற்றும் தறி உபகரணங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக 10 பேருக்கு இலவச தையல் இயந்திரம் ஆகிய நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.*மேலும் *வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் திட்டம் மற்றும் TNRTP, தாட்கோ, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை ஆகியவற்றின் கீழ் என மொத்தமாக 3836 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன…
கலசப்பாக்கம் செய்தியாளர் M. வெங்கடேசன்