
அண்ணாமலைக்கு வாழ்த்தும் கிடையாது, ஆதரவும் கிடையாது. அண்ணாமலை வந்ததால் பா.ஜ.க பலமடையவும் இல்லை; அவர் வெளியே சென்றதால் பலவீனம் அடையவும் இல்லை. அண்ணாமலையுடன் சென்றவர்கள் சுயநலவாதிகள். பொதுநலவாதிகள் பா.ஜ.க.விலேயே தொடருகின்றனர். தாமரையில் இருந்து ஒரு இதழை கூட யாராலையும் அசைக்க முடியாது.
கட்சியை விட்டுச் சென்றவர்களுக்கு ஆதரவும் கிடையாது; வாழ்த்தும் கிடையாது. புதிய இயக்கத்தில் லட்சம் பேர் இணைகிறார்கள் என்பது எங்களுக்கு பொருட்டல்ல; லட்சியவாதிகள் எங்களுடன் இருக்கின்றனர். வேறு முகத்தைக் காண்பித்து பா.ஜ.கவுக்கு மாற்று சக்தியைத் தேட வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.