சேலம் மாவட்டம் தேவியாக்குறிச்சியில் ஸ்ரீ ஐயனார் – ஸ்ரீ செல்லியம்மன் தேர் திருவிழா கோலாகலம்தலைவாசல், ஜூலை 28: சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள தேவியாக்குறிச்சி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ ஐயனார் – ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயிலின் ஆண்டு தேர் திருவிழா பக்தி பரவசத்துடன் சிறப்பாக நடைபெற்றது.விழாவையொட்டி அதிகாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஸ்ரீ ஐயனார் மற்றும் ஸ்ரீ செல்லியம்மன் எழுந்தருளி, முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பெண்கள் குலவையிட்டு சுவாமியை வழிபட்டனர். தேவியாக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.விழாவை முன்னிட்டு கோயில் நிர்வாகம் மற்றும் விழாக்குழு சார்பில் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னதானம் பெற்றனர்.தேர் திருவிழாவை முன்னிட்டு காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு ஏற்பாடுகளை மேற்கொண்டு விழா சிறப்பாக நடைபெற நடவடிக்கை எடுத்தனர். அவர்களின் கண்காணிப்பில் விழா அமைதியாகவும், எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி சிறப்பாக நிறைவடைந்தது.
சேலம் செய்தியாளர் பாலமுருகன்