தமிழ்நாடு முதல்வராக சி. ஜோசப் விஜய் அவர்கள் இன்று காலை 10 அளவில் நேரு விளையாட்டு அரங்கில் பதவி ஏற்றார்.
பதவியேற்று முதல் மூன்று சிறப்பம்சங்களில் கையெழுத்து போட்டார். அவை
1. இரண்டு மாதத்திற்கு 500 யூனிட் பயன்படுத்தும் வீடுகளுக்கு 2 மாதத்திற்கு 200 யூனிட் இலவச மின்சாரம்.
2.போதைப்பொருள் தடுப்பு சிறப்பு டாஸ்க் ஃபோர்ஸ் அமைத்தல்.
3.பெண்கள் பாதுகாப்பிற்கான தனி பாதுகாப்பு படை அமைத்தல்.
அதுமட்டுமின்றி அவர் பேட்டி அளிக்கையில் நானும் தவறு செய்யமாட்டேன் யாரையும் தவறு செய்ய விட மாட்டேன் என்று கூறி பதவிக்கு வந்து விட்டோம் என்ற எண்ணத்தில் ஏதாவது தவறான செயல்களில் ஈடுபடும் எண்ணம் இருந்தால் அந்த எண்ணங்களை இங்கேயே மறந்து விடுங்கள் என்று எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதுமட்டுமின்றி தன்னை வெற்றி பெற செய்த மக்கள் மற்றும் சிறுவர்களுக்கு நன்றியை தெரிவித்து தமிழ்நாட்டை பாதுகாப்பான நாடாகவும் மற்றும் என்னை வெற்றி பெறச் செய்த உங்களுக்கு உண்மையாக இருப்பேன் என்று உறுதி அளித்தார்.
மாவட்டச் செய்தியாளர் பு. பிரபு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா பெயர் மட்டும் கிணற்றில் விவசாய நிலத்தில் உள்ள வறண்ட கிணற்றில் ஆனந்தி என்ற பெண்மணி தவறி விழுந்துள்ளார். தகவல் அறிந்த செங்கம் தீயணைப்புத் துறையினர் …