17.04.2026 – சேலம் மாவட்டம் கெங்கவல்லி தொகுதியில் அதிமுக வேட்பாளர் அ. நல்லதம்பி தீவிர வாக்கு சேகரிப்பு!சேலம் மாவட்டம், தலைவாசல் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட நாவக்குறிச்சி தலைவாசல் நத்த கரை உள்ளிட்ட பகுதிகளில் கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளர் அ. நல்லதம்பி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.பிரச்சாரத்தின் போது மக்களுக்கு பல முக்கிய வாக்குறுதிகளை அறிவித்தார்:ரேஷன் கார்டு அடிப்படையில் ₹10,000 நிதியுதவிவிவசாயக் கடன் தள்ளுபடிபுதிய வேலைவாய்ப்பு திட்டங்கள்கால்நடை பூங்காவில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கம்இந்த பிரச்சாரம் ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி, எம்ஜிஆர் மன்ற ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன், அன்பழகன், அய்யாவு, ராஜேந்திரன், என்.கே. முத்துசாமி, வார்டு உறுப்பினர் ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு, முன்னாள் கவுன்சிலர் சின்னதுரை, மகளிர் அணி நிர்வாகிகள் ராதா, பானுமதி, பாஜக ஒன்றிய தலைவர் ஜி.எம். முருகன், பாமக ஒன்றிய தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உற்சாகமாக நடைபெற்றது.
சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்
