
புதிய இயக்கம் தொடங்கும் அறிவிப்பை நாளைய தினம் வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப் போவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.இதுகுறித்து அண்ணாமலை புதன்கிழமை கூறுகையில், சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) ஊடக சந்திப்பை நடத்தி எனது நிலைப்பாடு குறித்து விரிவாக விளக்கவுள்ளேன். முதல்கட்டமாக ஓா் இயக்கத்தைத் தொடங்குவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். ஒன்றரை ஆண்டுகள் அந்த இயக்கத்தை நடத்தி, நிா்வாகிகள், தொண்டா்களுக்கு அரசியல் பயிற்சியை அளித்துவிட்டு, அதன் பின்னா் புதிய அரசியல் கட்சியைத் தொடங்க முடிவு செய்துள்ளேன் என்றாா்.